NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு 
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Apr 15, 2023
    11:30 am
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு 
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு

    தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த போலீசார் முதலில் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்த அமைப்பின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தை நாடி சென்று முறையிட்டனர். இதனையடுத்து இந்த அமைப்பினர் பேரணி நடத்த நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் பேரில் இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த அனுமதி அளித்ததோடு, தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் படி, தற்போது தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் நேற்று(ஏப்ரல்.,13) அனுமதியளித்தனர். அதன்படி வரும் 16ம் தேதி இந்த பேரணியானது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2/2

    லத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த கூடாது

    இதனையொட்டி அனைத்து மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது இந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், தமிழக காவல்துறை சில நிபந்தனைகளை தற்போது விதித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதன்படி இந்த பேரணியின் பொழுது லத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த கூடாது. மேலும் இந்த பேரணியின் போது தடைசெய்யப்பட்ட அமைப்புகள் குறித்து பேசக்கூடாது. மற்ற மதங்களை குறித்து பேசவோ அல்லது பாடல்கள் பாடவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    தமிழக காவல்துறை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்  கடற்கரை
    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை அறிக்கை  புதுச்சேரி
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  சென்னை
     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு சென்னை

    தமிழக காவல்துறை

    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட் கோலிவுட்
    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது தமிழ்நாடு
    சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை கோலிவுட்
    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023