NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பத்தூரில் இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பத்தூரில் இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது

    திருப்பத்தூரில் இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2024
    09:34 am

    செய்தி முன்னோட்டம்

    திருப்பத்தூர் நகரில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள கார் ஷெட்டுக்குள் பதுங்கியிருந்த மூன்று வயது ஆண் சிறுத்தை, 11 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிபட்டது.

    மேலும், பிடிபட்ட அந்த சிறுத்தை, திருப்பத்தூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஆழமான கொத்தூர் காப்புக் காட்டில் (ஆர்எஃப்) பாதுகாப்பாக விடப்பட்டது.

    11 மணிநேரம் தொடர்ந்த மீட்பு நடவடிக்கை, இன்று காலை 6 மணியளவில் அந்த சிறுத்தை பாதுகாப்பாக காட்டில் விடப்பட்டதன் மூலம் மகிழ்ச்சியாக முடிந்தது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பத்தூரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சிறுத்தைப்புலி மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா 

    சிறுத்தையை பிடிக்க நடத்தப்பட்ட 11 மணிநேர மீட்பு பணி 

    அந்த சிறுத்தை தனது இயற்கையான வாழ்விடத்திலிருந்து ஏன் வெளியேறியது என்பதற்கான காரணங்கள் ஆராயப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர்(டிஎஃப்ஓ) எம். மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் கே.சுகுமார் தலைமையிலான 30 பேர் கொண்ட விலங்குகள் மீட்புக் குழுவினர் அந்த சிறுத்தையின் மறைவிடத்திற்கு சென்று மயக்க ஊசி போட்டு அதை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, குடியாத்தம், பேர்ணாம்புட், ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 வனத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இறுதியாக அதிகாலை 2.30 மணியளவில் சிறுத்தை பிடிபட்டது. அதன் பிறகு அது 20 கிமீ தொலைவில் உள்ள ஆழமான கொத்தூர் காப்புக் காட்டில் (ஆர்எஃப்) பாதுகாப்பாக விடப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது

    #JUSTIN திருப்பத்தூரில் இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது#Thiruppathur #Leopard #News18tamilnadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/2kbo6C4jJ0

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) June 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வனத்துறை

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025