NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 
    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 
    இந்தியா

    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    April 27, 2023 | 09:47 am 1 நிமிட வாசிப்பு
    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 
    ரிசர்வ் வங்கியின் e-ரூபியை கட்டண முறையாக ஏற்றுக் கொண்ட ரிலையன்ஸ் ஜெனரல்

    இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணங்களுக்கு ரிசர்வ் வங்கியின் e-ரூபியை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம். e-ரூபியை கட்டணமுறையாக ஏற்றுக் கொள்ளும் இந்தியாவின் முதல் இன்சூரன்ஸ் நிறுவனமாக தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த சேவைக்காக எஸ் பேங்குடன் கைகோர்த்திருக்கிறது ரிலையன்ஸ் ஜெனரல். அவ்வங்கியின் e-ரூபி தளத்தைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்த முடியும். எந்தவொரு வங்கியின் e-வாலட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் ரிலையன் ஜெனரலின் e-ரூபி QR கோடைப் பயன்படுத்தி உடனடியாகக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. e-ரூபியை ஏற்றுக்கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதில் பங்கெடுத்துக் கொள்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    ரிசர்வ் அறிமுகப்படுத்திய e-ரூபி: 

    இந்தியாவின் முதல் டிஜிட்டல் நாணயமாக e-ரூபியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி. மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஷ்வர் ஆகிய நான்கு நகரங்களில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃபிசி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் இணைந்த புதிய e-ரூபி சேவையைத் தொடங்கியது ரிசர்வ் வங்கி. இதுவரை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேவை இதர வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தில் இருக்கிறது ரிசர்வ் வங்கி. மேற்கூறிய நான்கு நகரங்களைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில், அகமதாபாத், கேங்டாக், கௌகாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களில் இந்த சேவை விரிவுபடுத்தவிருக்கின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    ரிசர்வ் வங்கி

    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மகாராஷ்டிரா
    UPI மூலம் EMI வசதி.. அறிமுகப்படுத்தியது ICICI  இந்தியா
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்

    இந்தியா

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் பிவி சிந்து
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது உச்ச நீதிமன்றம்
    திரையரங்கில் லேப்டாப்பில் வேலை செய்த நபர் - வைரலாகும் வீடியோ!  ட்ரெண்டிங் வீடியோ
    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023