NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 
    ரிசர்வ் வங்கியின் e-ரூபியை கட்டண முறையாக ஏற்றுக் கொண்ட ரிலையன்ஸ் ஜெனரல்

    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 27, 2023
    09:47 am

    செய்தி முன்னோட்டம்

    இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணங்களுக்கு ரிசர்வ் வங்கியின் e-ரூபியை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்.

    e-ரூபியை கட்டணமுறையாக ஏற்றுக் கொள்ளும் இந்தியாவின் முதல் இன்சூரன்ஸ் நிறுவனமாக தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    இந்த சேவைக்காக எஸ் பேங்குடன் கைகோர்த்திருக்கிறது ரிலையன்ஸ் ஜெனரல். அவ்வங்கியின் e-ரூபி தளத்தைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்த முடியும்.

    எந்தவொரு வங்கியின் e-வாலட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் ரிலையன் ஜெனரலின் e-ரூபி QR கோடைப் பயன்படுத்தி உடனடியாகக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    e-ரூபியை ஏற்றுக்கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதில் பங்கெடுத்துக் கொள்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    இந்தியா

    ரிசர்வ் அறிமுகப்படுத்திய e-ரூபி: 

    இந்தியாவின் முதல் டிஜிட்டல் நாணயமாக e-ரூபியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி.

    மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஷ்வர் ஆகிய நான்கு நகரங்களில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃபிசி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் இணைந்த புதிய e-ரூபி சேவையைத் தொடங்கியது ரிசர்வ் வங்கி.

    இதுவரை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேவை இதர வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தில் இருக்கிறது ரிசர்வ் வங்கி.

    மேற்கூறிய நான்கு நகரங்களைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில், அகமதாபாத், கேங்டாக், கௌகாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களில் இந்த சேவை விரிவுபடுத்தவிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு!  சச்சின் டெண்டுல்கர்
    ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா டாடா
    அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்  கனடா
    இளம்பெண்ணுடன் சேர்ந்து க்யூட்டாக நடனமாடிய யானை - வைரல் வீடியோ!  ட்ரெண்டிங் வீடியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025