NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட் 
    இருப்பதிலேயே இமாச்சலப் பிரதேசத்திற்கு தான் இந்த கனமழையினால் அதிக அடி விழுந்திருக்கிறது.

    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 12, 2023
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    வட இந்தியாவில் நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல நிலச்சரிவுகளும், பொருள் சேதங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, பாலங்கள் அடித்துச் செல்லப்படுவதும், மழையினால் நிலச்சரிவு ஏற்படுவதும், வாகனங்கள் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவதும் போன்ற பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    இருப்பதிலேயே இமாச்சலப் பிரதேசத்திற்கு தான் இந்த கனமழையினால் அதிக அடி விழுந்திருக்கிறது.

    இமாச்சலில் மட்டும் இந்த கனமழையால் 31-பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலின் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று கசோல், மணிகரன், கீர் கங்கா மற்றும் புல்கா பகுதிகளில் வான்வழி ஆய்வு நடத்தினார்.

    சிஜேக்க

    யமுனை நதியின் நீர்மட்டம் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது

    இந்த கனமழையால், இமாச்சலில் மட்டும் ரூ.3,000-ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன.

    ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த நான்கு நாட்களாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

    இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வியாழக்கிழமை வரை பயணம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    டெல்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்ட்
    வானிலை ஆய்வு மையம்
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    வானிலை ஆய்வு மையம்

    கேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் இந்தியா
    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை இந்தியா
    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை  இந்தியா

    வானிலை எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    -4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது இந்தியா
    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இலங்கை
    இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025