NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு 
    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு 
    இந்தியா

    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு 

    எழுதியவர் Nivetha P
    April 18, 2023 | 06:52 pm 0 நிமிட வாசிப்பு
    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு 
    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை கைத்தறி பட்டு மிகவும் பிரபலமானது. இந்த தொழிற்சாலையினை நம்பி 5,000க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளார்கள். இத்தகைய பாரம்பரிய கைத்தறியில் பல்வேறு புது கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர் சிறுமுகையினை சேர்ந்த நெசவாளரான காரப்பன் என்பவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக முயற்சி செய்து மாற்றுதினாளிகளும் கைத்தறி தொழிலில் ஈடுபடும் வகையில் ஒரு கை மற்றும் ஒரு கால் கொண்டு செயல்படும் வகையில் கைத்தறி ஒன்றினை வடிவமைத்துள்ளார். இது குறித்து தகவலறிந்த மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை மூலம் பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு இந்த கைத்தறியினை அங்கீகரித்துள்ளது.

    புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் கண்காட்சி 

    மேலும் இந்த கைத்தறி அண்மையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியில் இடம்பெற்றது. அதனையடுத்து அதனை அங்கீகரித்ததோடு தற்போது விருது வழங்கப்பட்டு அந்த நெசவாளர் கெளரவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய நெசவாளர் காரப்பன், இந்த விருது நெசவாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். நெசவுத்தொழில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் இந்த விருதுகள் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள இந்த நெசவு தொழிலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளார். விவசாயம், டெக்ஸ்டைல்ஸ், கைவினை பொருட்கள் என பல துறைகளில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் வகையில் 2 ஆண்டிற்கு ஒரு முறை இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோவை
    தமிழ்நாடு
    மத்திய அரசு

    கோவை

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  காவல்துறை
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன் திரைப்பட அறிவிப்பு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்  திருச்சி
    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம்  தஞ்சை பெரிய கோவில்
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  கோவில்கள்

    மத்திய அரசு

    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!  தமிழ்நாடு
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்  இந்தியா
    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை ஆன்லைன் விளையாட்டு
    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023