NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
    குடும்ப கூட்டணி பத்திரங்களை பதிவு செய்வதற்கான முறையை பரிசீலிக்குமாறு உத்தரவு

    ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 18, 2023
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கவும், சமூகத்தில் அத்தகைய உறவுகளில் உள்ளவர்களின் நிலையை மேம்படுத்தவும், "குடும்ப கூட்டணி பத்திரத்தை" சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்குமாறு தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது.

    லெஸ்பியன் தம்பதியினர் ஒருவர் தங்கள் உறவினர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    "குடும்ப கூட்டணி பத்திரத்தை" சட்டப்பூர்வ ஆவணமாக அங்கீகரிப்பதன் மூலம், LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, அவர்கள் தொந்தரவு/துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் வாழ்வதையும் உறுதி செய்ய முடியும் என்று நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

    நபிமவெல்ட்ஜ்

    சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறைக்கு உத்தரவு 

    "​​மனுதாரர் வழங்கி இருக்கும் இந்த ஆலோசனை/முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, அத்தகைய 'குடும்ப கூட்டணி பத்திரம்' மற்றும் அத்தகைய பத்திரத்தின் நோக்கம் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான நடைமுறையை அரசு கொண்டு வரலாம்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    "அப்படிச் செய்தால், ஒரே பாலின உறவில் இருக்கும் நபர்களுக்கு அரசு ஒப்புதலை வழங்க முடியும். மேலும் இது அத்தகைய நபர்களின் அந்தஸ்தை பெரிய அளவிற்கு உயர்த்தும்." என்றும் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    எனவே, குடும்ப கூட்டணி பத்திரங்களை பதிவு செய்வதற்கான முறையை பரிசீலிக்குமாறு சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறைக்கு நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

    ஏற்கனவே இந்த துறை LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழக அரசு
    தன்பால் ஈர்ப்பாளர்கள்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சென்னை

    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு
    சென்னைவாசிகளுக்கு தினமும் 1,000 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு   குடிநீர்
    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை விபத்து
    தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு தீபாவளி

    சென்னை உயர் நீதிமன்றம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜி வழக்கு: ஜூன் 12 வரை காவல் நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவு  செந்தில் பாலாஜி
    வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு தமிழகம்
    அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட் செந்தில் பாலாஜி

    தமிழக அரசு

    டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு  சுகாதாரத் துறை
    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்  உயர்நீதிமன்றம்
    சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு சென்னை

    தன்பால் ஈர்ப்பாளர்கள்

    #LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள் காதலர் தினம்
    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  இந்தியா
    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம்  இந்தியா
    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025