NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள்

    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள்

    எழுதியவர் Nivetha P
    Mar 26, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    ராமநாதபுரத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து மீனவ பெண்கள் கடலுக்குள் சென்று கடல் பாசிகளை சேகரித்து வந்து அதில் கிடைக்கும் வருமானத்தினை கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இவர்களை அப்பகுதி மக்கள் கடல்தேவதைகளாக பார்க்கிறார்கள்.

    எனினும் இத்தொழிலில் போதுமான வருமானம் தருவதில்லை என்று அப்பெண்கள் வருத்தம் தெரிவித்துவருகிறார்கள்.

    கடற்பாசி எடுக்கும் பெண்கள் காலநிலை, காற்றின் வேகம் உள்ளிட்டவைகளை பொருத்து ஒவ்வொரு வகை பாசிகளை சேகரிக்கிறார்கள்.

    கட்டக்கோரை, கற்கம் பாசி, கஞ்சிப்பாசி, மரிக்கொழுந்து பாசி போன்ற வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் கோடைகாலமான தற்போது மரிக்கொழுந்து வகை பாசிகளை இவர்கள் சேகரிப்பார்களாம்.

    ராமநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மீனவப்பெண்கள் 40-50 வருடங்களுக்கு மேலாக இந்த பாசிகளை சேகரிக்கும் பணியினை செய்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    நஞ்சு மீன்கள்

    ஒரு கிலோ பாசியின் விலை ரூ.50

    அதிகாலை நேரத்தில் கடலுக்கு சென்று காற்றின் வேகம், கடல் அலை, கண்களில் பாசி தென்படுகிறதா என்பனவற்றை பார்த்த பின்னர் கடல்பாசிகளை எடுக்க கடலுக்குள் செல்வார்களாம்.

    மாலை வரை இந்த பணி தொடரும் நிலையில் பெண்களும் கடலுக்குள்ளேயே இருக்கவேண்டும்.

    இப்பெண்கள் சேகரிக்கும் கடற்பாசிகளை வாங்கிச்செல்ல வியாபாரிகள் வருவார்களாம்.

    ஒரு கிலோ பாசியில் விலை ரூ.50 ஆகும். தற்போதைய விலைவாசிக்கு வெறும் ரூ.50 ஒரு கிலோக்கு கொடுத்தால் எப்படி பிழைப்பது என்று அப்பெண்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

    மேலும் இப்பாசிகளை பாறையில் இருந்து எடுக்கும் போது பாறைகள் கைகளை கிழித்து விடும்.

    பாறைக்கு அடியில் இருக்கும் திருக்கை மீன்கள் வாலினை வைத்து கீறிவிடும்.

    மேலும் சில நஞ்சு மீன்கள் கடித்தால் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராமநாதபுரம்
    கடற்கரை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு தமிழ்நாடு செய்தி
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது தமிழ்நாடு
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் தமிழ்நாடு

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025