NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்
    இந்தியா

    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்

    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்
    எழுதியவர் Nivetha P
    Mar 09, 2023, 07:25 pm 1 நிமிட வாசிப்பு
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்

    ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடியில் வைகை நகரை சேர்ந்த சிகாமணி (44), இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஆவார். இவரும் இவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமது(36) என்பவரும் இந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை காரில் ஏற்றி அழைத்து சென்று மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள். இவர்களோடு புது நகரை சேர்ந்த பிரபாகரனும்(42) இணைந்து பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

    வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி போராட்டம்

    அவர்கள் அளித்த புகாரின் பேரில், மேற்கூறிய மூவரையும், இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி சிகாமணி நடத்தும் நிறுவனத்தில் பணியாற்றும் கயல்விழி(45), அவருடன் பணியாற்றும் அன்னலட்சுமி என்னும் உமா(34) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மகளிர் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகள் உள்ளிட்டவை போராட்டம் நடத்தினர். இது தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரம்

    தமிழ்நாடு

    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு
    "வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்": கவிஞர் வைரமுத்து கோலிவுட்
    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு உலக செய்திகள்
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா

    மாவட்ட செய்திகள்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விழுப்புரம்
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது கோவை

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல் தமிழ்நாடு
    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023