NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்
    சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்

    'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 15, 2023
    09:25 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா எப்போதுமே அமைதியை விரும்பும் தேசமாக இருந்து வருகிறது என்றாலும் தீய நோக்கத்தோடு அணுகுபவர்களை வேடிக்கை பார்ப்போம் என்று அர்த்தமல்ல என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

    77வது சுதந்திர தினத்தை ஒட்டி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) ஆல் இந்தியா ரேடியோ மூலம் ராணுவ வீரர்களுக்கு அவர் வழங்கிய வானொலி உரையில் இதை தெரிவித்துள்ளார்.

    ராஜ்நாத் சிங் தனது உரையில், "நாங்கள் அமைதியை விரும்புவது மட்டுமல்லாமல், எங்கள் செயல்களின் மூலம் அமைதிக்கான எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறோம்.

    ஆனால் அதே சமயம், யாரேனும் எங்களை தவறான நோக்கத்துடன் அல்லது விரோதத்துடன் பார்க்கத் துணிந்தால், எங்கள் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்." என்று கூறினார்.

    rajnath sing speaks about achievements in defence

    நவீனமயமாகும் இந்திய ராணுவம் : ராஜ்நாத் சிங்

    எதிர்காலச் சவால்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் வகையில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சிறந்த பயிற்சியுடன் ஆயுதப் படைகளை நவீனப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

    மேலும், புதிய வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப புதிய கிளைகள் மற்றும் பிரிவுகள் பாதுகாப்புப் படைகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றார்.

    ராணுவம் இந்த ஆண்டு முதல் முறையாக பீரங்கி படைப்பிரிவில் பெண் அதிகாரிகளை இணைத்துள்ளதாகவும், நாட்டின் திறமையான மகள்களை சைனிக் பள்ளிகளில் சேர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

    முடிவாக, நாட்டின் எந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்தாலும், 140 கோடி இந்தியர்களின் இதயங்களிலும் ராணுவ வீரர்கள் இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜ்நாத் சிங்
    சுதந்திர தினம்
    இந்தியா
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ராஜ்நாத் சிங்

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை

    இந்தியா

    தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு  மத்திய அரசு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 9 தங்கம் வெள்ளி விலை
    உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு தவறுதலாக ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கிய மத்திய அரசு  மத்திய அரசு
    ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்  மு.க ஸ்டாலின்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; விமானம்
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025