ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால் பெயர் மாற்றம் - திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவானது வரும் 6ம்தேதி நடக்கவுள்ளது. இதில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதற்காக வரும் ஆகஸ்ட் 5ம்தேதி மாலை சென்னை வரவுள்ள திரௌபதி முர்மு, அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். மறுநாள் காலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஜனாதிபதி, அன்றே ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலுக்கு பெயர்மாற்றம் செய்யப்படும் விழாவில் கலந்துக்கொண்டு, புதிய பெயரின் பலகையினை திறந்து வைக்கவுள்ளார். அதன்படி, இந்த ஹாலுக்கு 'மகாகவி சுப்ரமணிய பாரதியார் அரங்கம்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பெயர்சூட்டியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு சாதனையாளர்கள், பழங்குடியினமக்கள், தமிழரறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்வதற்கான அழைப்பிதழினை ஆளுநர் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.