NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர்
    கடவுள் விஷ்ணுவை மணந்த பூஜா சிங்

    கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர்

    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதாகும் இவர் அரசியலறிவில் பட்டம் பெற்றவர்.

    இவரது தந்தை எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். பூஜா சிங் தனது சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வதை பார்த்து, திருமண வாழ்வு மீது பெரும் வெறுப்பினை அடைந்துள்ளார்.

    தானும் அவ்வாறு திருமணம் செய்து தனது கணவருடன் சண்டை போட அவருக்கு விருப்பமில்லை.

    இந்நிலையில் அவரது திருமணம் குறித்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கேட்க துவங்கியுள்ளனர், அவரது பெற்றோரும் தினமும் திருமணம் செய்துக்கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்கள்.

    இதனையடுத்து அவரது தொந்தரவுகளை தவிர்க்க, தான் சிறு வயதில் இருந்து விரும்பி வழிபட்டு வந்த கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துக்கொள்ள போவதாக பூஜா தெரிவித்துள்ளார்.

    300 பேர் பங்கேற்பு

    மணமகன் இல்லாமல் நடந்த வினோத திருமணம்

    இதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை, எனினும் தொடர்ந்து சண்டையிட்டும் பூஜா தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்பதால், பூஜாவின் தாயார் மட்டும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, டிசம்பர் 8ம் தேதி திருமணம் என அறிவிக்கப்பட்டு, மணமகன் இல்லாமல் இத்திருமணம் ராஜஸ்தான் ஹாம்லட்டில் நடைபெற்றது.

    300 நபர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். எனினும் பூஜாவின் தந்தை திருமணத்திற்கு வரவில்லை.

    இதனை தொடர்ந்து பூஜாவின் தாய் அனைத்து சடங்குகளையும் செய்தார். பூஜாவின் திருமணத்திற்கு அவரது நண்பர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள பலரும் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலகம்
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025