NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு
    எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு
    இந்தியா

    எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு

    எழுதியவர் Arul Jothe
    May 23, 2023 | 03:32 pm 0 நிமிட வாசிப்பு
    எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு
    எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு

    சென்னை கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகரன் பச்சை, சர்வதேச அளவில் அலைச் சறுக்குப் போட்டிகளில் வெற்றிகளை குவித்தவர். அலைச் சறுக்குப் பயிற்சியாளராக இருந்து வரும் இவருக்கு மலையேற்றத்தின் மீது ஆர்வம் அதிகம். மேலும், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது இவரது கனவாக இருந்துள்ளது. ஒராண்டாக மலையேற்றப் பயற்சியை மேற்கொண்டு வந்த இவர் மணாலி, சோலாங் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் பயிற்சி எடுத்துள்ளார். ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில், தனது கனவு பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை மே 19 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்துள்ளார்.

    விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த ராஜசேகர்

    கடுமையான குளிர், சறுக்கல்கள் என பல இன்னல்களையும் தடைகளையும் தாண்டி விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராஜசேகரனை பொதுமக்கள் & கோவளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆரத் தழுவி கட்டியணைத்து வரவேற்றனர். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இவரின் சாதனையை பாராட்டும் வகையில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "நான் எவரெஸ்ட் மேலே ஏற சென்ற பொழுது மூன்று உயிரிழப்புகளை வழியில் பார்த்தேன். ஆனால் அதை மீறி சாதித்து இருப்பது மகிழ்ச்சி" என்று ராஜசேகரன் தெரிவித்தார். மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்திருப்பது நமக்கு பெருமை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    சென்னை

    இந்தியா

    இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் இங்கிலாந்து
    மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்  கலவரம்
     இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு கொரோனா
    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது  உஸ்பெகிஸ்தான்

    சென்னை

    நடிகர் சரத் பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்!  ரஜினிகாந்த்
    கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல்  சேகர் பாபு
    நடிகர் சரத்பாபுவின் உடல், சென்னைக்கு கொண்டு வரப்பட்டது! கோலிவுட்
    சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டி! வெளியானது அறிவிப்பு! உலக கோப்பை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023