NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரு மணி நேரத்தில் சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு மணி நேரத்தில் சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு 
    ஒரு மணி நேரத்தில் சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு

    ஒரு மணி நேரத்தில் சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு 

    எழுதியவர் Nivetha P
    Nov 04, 2023
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, 'கடந்த 3 நாட்களாக சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இதுவரை 11 செ.மீ.,மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. எனினும், தேங்கிய மழைநீர் அனைத்தும் ஒரு மணிநேரத்தில் அகற்றப்பட்டது' என்று கூறினார்.

    தொடர்ந்து, சென்னையில் மழைநீர் தேங்காத அளவிற்கு குறிப்பிட்ட பகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    அமைச்சர் 

    வடிகால் பணிகள் 98% நிறைவடைந்துள்ளதாக தகவல் 

    மேலும் அவர், சென்னையில் எவ்வளவு கனமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    எந்த பகுதியில் மழைநீர் தேங்கினாலும் அதனை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    அதேபோல் சென்னையில் மேற்கொண்டுள்ள வடிகால் பணிகள் 98% நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 2% பணியும் விரைந்து முடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார்.

    மழையில் மரங்கள் சாய்ந்து விழுந்தால் அதனை நீக்கும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னையில் நடந்து வந்த சாலை பணிகள் யாவும் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    சென்னை
    நகராட்சி

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    கனமழை

    தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி தென் கொரியா
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி டெல்லி

    சென்னை

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம்  மருத்துவக் கல்லூரி
    நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம் பாஜக

    நகராட்சி

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025