LOADING...
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு தொடர போகும் மழை
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு தொடர போகும் மழை

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு தொடர போகும் மழை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 07, 2023
08:46 am

செய்தி முன்னோட்டம்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், நேற்றிலிருந்து, இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல், தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பொழிந்தது. இன்று காலையும் பல இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும், மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம்வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

embed

தொடர போகும் மழை

RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2023-11-07-05:07:58 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கும்மிடிப்பூண்டி,மயிலாப்பூர்,புரசைவாக்கம்,சோழிங்கநல்லூர்,திருவொற்றியூர்,தண்டையார்பேட்டை,வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/KwhuGM2wF0— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 6, 2023

embed

தொடர போகும் மழை

Convective cells along the coastal belt of Cuddalore, Mayiladuthurai, Nagapattinam, Tiruvarur, Thanjavur, Pudukkottai districts and Karaikal area pic.twitter.com/yMr6U4IeUB— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 7, 2023