NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு 
    தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு

    தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Dec 18, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருவதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக, தூத்துக்குடியில் கனமழை பெய்துவரும் நிலையில் எம்.பி.கனிமொழி, தூத்துக்குடியில் கனமழை காரணமாக அம்மாவட்ட மக்களின் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கான உதவிகளை செய்துவரும் நிலையில், மருத்துவம், உணவு உள்ளிட்ட அவரச தேவைக்கான உதவிக்கு 80778 80779 என்னும் எண்ணின் வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்புக்கொள்ளலாம் என்றும்,

    தன்னார்வலர்கள் விரும்பினால் இச்சேவையில் இணைந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டு இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதேபோல் அம்மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி பேரிடர் கட்டுப்பாட்டு மைய எண்.1077க்கும்,

    மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மைய எண்.1070க்கும், மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் மக்கள் அவசர தேவைக்காக தொடர்புக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

    மழை 

    4 மாவட்ட மக்களுக்கும் அவரச உதவி எண்கள் அறிவிப்பு 

    மேலும், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னக உதவிஎண்.9445854718 என்னும் எண்ணுக்கு தொடர்புக்கொள்ளலாம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மக்களுக்கான அவசர உதவிக்கு 04622501012 என்னும் உதவி எண்ணுக்கும்,

    கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அவசர உதவிக்கு 04652231077-என்னும் எண்ணுக்கும்,

    தென்காசி மக்கள் 04633290548 என்னும் எண்ணுக்கும் தொடர்புக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தூத்துக்குடி கயத்தாறு-தேவர்குளம் சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி-திருச்செந்தூர் வழித்தடத்தில் சென்ற அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, திருநெல்வேலி-மதுரை நெடுஞ்சாலை வழியே கயத்தாறு செல்லும் வழியிலுள்ள பாலங்கள் நிரம்பியுள்ள காரணத்தினால் அங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குறிப்பிட்ட இந்த 4 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று(டிச.,18)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    எக்ஸ் பதிவு 

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம்.

    மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம்.… pic.twitter.com/wQd7cxQdUf

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    ஆட்சியர்
    கனிமொழி
    வாட்ஸ்அப்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    ஆட்சியர்

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி  திருவண்ணாமலை
    கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது  தமிழ்நாடு

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்  கோவை

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப்பில் ஏற்பட்ட கோளாறு: சரிசெய்யப்பட்டதாக ட்வீட் செய்திருக்கும் கூகுள் கூகுள்
    'பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி' மூலம் தகவல்களை திருடும் புதிய மோசடி  ஆன்லைன் மோசடி
    'சேனல்ஸ்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்ப்  இன்ஸ்டாகிராம்
    வாட்ஸ்அப்பில் பாதுகாப்பான முறையில் சாட் ஹிஸ்டரியைப் பறிமாறிக் கொள்ள புதிய வசதி அறிமுகம் மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025