NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோடி குடும்பப்பெயர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோடி குடும்பப்பெயர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி 
    ராகுல் காந்தி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    மோடி குடும்பப்பெயர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 15, 2023
    06:44 pm

    செய்தி முன்னோட்டம்

    'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஜூலை-15) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

    எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் அப்போது கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ்-மோடி அவதூறு வழக்கினை பதிவு செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சூரத்-நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.

    உய்ச்வ்

    குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்துவிட்டது

    இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். ஆனால், அதற்கு குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

    செஷன்ஸ் நீதிமன்றம் அல்லது குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை ஏற்று அவருக்கு நிவாரணம் வழங்கி இருந்தால், அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், அவரது எம்பி பதவியும் அவருக்கு திரும்ப கிடைத்திருக்கும்.

    ஆனால், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டை நிராகரித்த உயர்நீதிமன்றம் , "அரசியலில் தூய்மை ஏற்படுவது என்பது காலத்தின் தேவை. மக்கள் பிரதிநிதிகள் தெளிவான முன்னோடிகளாக இருக்க வேண்டும். மேலும், அவரது தண்டனைக்கு தடைவிதிக்க நியாயமான காரணம் இல்லை." என்று கூறியது.

    இந்நிலையில், ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    ராகுல் காந்தி

    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் டெல்லி

    உச்ச நீதிமன்றம்

    LGBTQIA+ சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான குழு நிச்சயமாக அமைக்கப்படும்: மத்திய அரசு  மத்திய அரசு
    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி இந்தியா
    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025