Page Loader
ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு 
இந்த பிரச்சனை குறித்து பிற நீதிமன்றங்கள் வழங்கிய அனைத்து உத்தரவும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு 

எழுதியவர் Sindhuja SM
Apr 24, 2023
03:56 pm

செய்தி முன்னோட்டம்

'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு மே 15 வரை தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் அப்போது கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவதூறு வழக்கினை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.

DETAILS

பிற நீதிமன்றங்கள் வழங்கிய அனைத்து உத்தரவும் இடைநிறுத்தப்பட்டது

'மோடி குடும்பப்பெயர்' கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2019ஆம் ஆண்டு பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு, ஏப்ரல் 12ஆம் தேதி ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என்று பாட்னாவின் கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி ஏப்ரல் 22ஆம் தேதி ராகுல் காந்தி பாட்னா உயர் நீதிமன்றத்தை அணுகினார். ராகுல் காந்தியின் மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் மே 15ஆம் தேதி இது குறித்து விசாரிக்க இருக்கிறது. அதுவரை, இந்த பிரச்சனை குறித்து பிற நீதிமன்றங்கள் வழங்கிய அனைத்து உத்தரவும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.