NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை
    காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை

    காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை

    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (52) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம்தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை துவங்கினார்.

    தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ஹரியானா என பல மாநிலங்களை கடந்து நடைபயணமாக தமது யாத்திரையை தொடர்ந்து வருகிறார்.

    விரைவில் அவர் ஜம்மு காஷ்மீரில் தனது யாத்திரையை மேற்கொள்ளவுள்ளார்.

    அதன்படி, வரும் 25ம்தேதி காஷ்மீரின் பனிஹால் பகுதியில் தேசிய கொடியை ஏற்றவுள்ள ராகுல் காந்தி, அனந்தநாக் மாவட்டம் வழியாக பயணம் மேற்கொண்டு அடுத்த 2 நாட்களில் ஸ்ரீ நகரை அடையவுள்ளார்.

    இந்நிலையில் இவரது ஸ்ரீ நகர் பயணத்தின் பொழுது, அவருடன் வெகு சிலரே அவரோடு பயணிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Z+ பிரிவு பாதுகாப்பு

    பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிய ராகுல் காந்தி

    அங்கு சில பாதைகள் பதற்றம் நிறைந்தது என்பதால், அங்கு மட்டும் ராகுல்காந்தி நடைப்பயணத்தை தவிர்த்து காரில் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராகுல்காந்தியின் 150 நாட்கள் நடைபயணம் 3750கிமீ தூரத்தை கடந்து வரும் 28ம்தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து 30ம்தேதி இவர் தலைமையில் ஸ்ரீநகரில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

    அதில் இவர் இந்திய ஒற்றுமைக்கான யாத்திரையை நிறைவு செய்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    கடந்த மாதம் ராகுல்காந்தி தனது பாதுகாப்பை யாத்திரையின் பொழுது உறுதிசெய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

    அதன்படி, அவருக்கு தற்போது Z+பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரிவு பாதுகாப்பில் அவரை சுற்றி 24 மணிநேரமும் 8-9 கமாண்டோக்கள் பாதுகாப்பிற்காக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    இந்தியா

    பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து இந்தியா
    நடுரோட்டில் காவலருக்கு கத்தி குத்து: வேடிக்கை பார்த்த மக்கள் இந்தியா
    மாதவிடாய்க்கு விடுமுறை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு இந்தியா
    ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள் பொழுதுபோக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025