NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை
    இந்தியா

    காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை

    காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை
    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023, 07:24 pm 1 நிமிட வாசிப்பு
    காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை
    காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (52) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம்தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை துவங்கினார். தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ஹரியானா என பல மாநிலங்களை கடந்து நடைபயணமாக தமது யாத்திரையை தொடர்ந்து வருகிறார். விரைவில் அவர் ஜம்மு காஷ்மீரில் தனது யாத்திரையை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, வரும் 25ம்தேதி காஷ்மீரின் பனிஹால் பகுதியில் தேசிய கொடியை ஏற்றவுள்ள ராகுல் காந்தி, அனந்தநாக் மாவட்டம் வழியாக பயணம் மேற்கொண்டு அடுத்த 2 நாட்களில் ஸ்ரீ நகரை அடையவுள்ளார். இந்நிலையில் இவரது ஸ்ரீ நகர் பயணத்தின் பொழுது, அவருடன் வெகு சிலரே அவரோடு பயணிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிய ராகுல் காந்தி

    அங்கு சில பாதைகள் பதற்றம் நிறைந்தது என்பதால், அங்கு மட்டும் ராகுல்காந்தி நடைப்பயணத்தை தவிர்த்து காரில் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் 150 நாட்கள் நடைபயணம் 3750கிமீ தூரத்தை கடந்து வரும் 28ம்தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து 30ம்தேதி இவர் தலைமையில் ஸ்ரீநகரில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இவர் இந்திய ஒற்றுமைக்கான யாத்திரையை நிறைவு செய்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த மாதம் ராகுல்காந்தி தனது பாதுகாப்பை யாத்திரையின் பொழுது உறுதிசெய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி, அவருக்கு தற்போது Z+பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு பாதுகாப்பில் அவரை சுற்றி 24 மணிநேரமும் 8-9 கமாண்டோக்கள் பாதுகாப்பிற்காக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி காங்கிரஸ்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023