ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடகா கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். "எப்படி அனைத்து திருடர்களும்'மோடி'என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள்" என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து குஜராத் பாஜக எம்.எல்.ஏ.புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கினை சூரத் நீதிமன்றத்தில் பதிவுசெய்திருந்தார். அதன்படி,ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. மேலும் 30 நாட்களுக்குள் ராகுல் காந்தி இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ராகுல்காந்தி, நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையினை நிறுத்திவைக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்த மனுவினை தள்ளுபடி செய்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.