NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல்
    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல்

    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல்

    எழுதியவர் Nivetha P
    Feb 04, 2023
    09:13 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது.

    இதற்கு தடைவிதிக்க கோரி பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில், 'அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே கருணாநிதி நினைவிடத்தில் பேனா சின்னம் நிறுவப்படும்' என்று தமிழக அரசு சார்பில் நேற்று(பிப்.,3) பதில் மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், பேனா நினைவு சின்னம் கடற்கரை ஒழுங்கு மண்டலத்தின் அனுமதிக்காக 2022ம்ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.

    இதனையடுத்து தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

    பதில் மனு தாக்கல்

    தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைக்கபட்டது-பொதுப்பணித்துறை

    இதனையடுத்து தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    2022 ஆகஸ்டில் இத்திட்டம் குறித்து வல்லுநர் குழுக்கூட்டம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து, தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.

    அதன் பின்னர் டிசம்பர் 29ம் தேதி கருத்துகேட்பு கூட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாக தெரிகிறது.

    பின்னர் தான் இதுகுறித்த அறிவிப்பு டிசம்பர் 31ம்தேதி நாளிதழ்களில் வெளியானது என்றும், ஜனவரி 31ம்தேதி இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த திட்டம் அனைத்துவிதமான அனுமதிகளை பெற்ற பின்னரே அதன் பணிகள் தொடரப்படும் என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கருணாநிதி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழகத்தில் தனியார் நிறுவன பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு இந்தியா
    தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு இந்தியா
    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம் இந்தியா

    கருணாநிதி

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை மெரினா கடற்கரை
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025