NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்
    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்

    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்

    எழுதியவர் Nivetha P
    Feb 04, 2023
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரியிலும் தமிழகத்தில் போல் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சார்பு செயலர் முருகேசன் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.

    அதில், ஆதார் கார்டு அரசின் அனைத்து சலுகைகள், சேவைகள் பெற பயன்படுத்தப்படுகிறது.

    இதன் மூலம் அரசின் சேவைகள் அனைத்தும் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பெற முடிகிறது.

    இதன் பேரில், தற்போது ஆதார் எண்ணை புதுச்சேரி மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆதார் எண் இணைப்பதோடு, வங்கி அல்லது தபால் வங்கி புத்தகம், பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை போன்றவையும் இணைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி அரசு

    இணையத்தள முகவரி மற்றும் கால கெடு விரைவில் அறிவிக்கப்படும்

    இதனையடுத்து இந்த ஆதார் எண் இணைப்பிற்கு இணையதள முகவரி மற்றும் காலக்கெடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் இதுவரை 3 லட்சத்து 50ஆயிரம் வீட்டுமின் இணைப்புகளும், 56 ஆயிரத்து 500 வர்த்தக பயன்பாடு இணைப்புகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் இது தவிர விளக்கு திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் இணைப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மின் இணைப்புகளின் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக வழிமுறைகளில் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு இது என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக தமிழகத்தில் மின்சாரத்துறை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கான கடைசி கெடுக்காலம் இம்மாதம் 15ம்தேதி வரை மட்டுமே என்று தமிழக அரசு திட்டவட்டமாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு இந்தியா
    தமிழகத்தில் தனியார் நிறுவன பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு இந்தியா
    தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு இந்தியா
    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025