NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
    புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவி தற்கொலை

    புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 17, 2025
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    புவனேஸ்வரில் உள்ள பிரபல கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (KIIT) நேபாளத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த விவகாரம் பல்கலைக்கழக மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை போராட்டங்கள் வெடித்தன.

    இறந்த மாணவி ஒரு மாதத்திற்கு முன்பு அளித்த புகார்களின் மீது நிர்வாகம் செவி சாய்காததை அடுத்து அந்த மனைவி இந்த முடிவை எடுத்ததாக மாணவர்கள் கூறினர்.

    திங்கள்கிழமை காலை KIIT பல்கலைக்கழகத்தின் (நிகர்) நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரிக்கு முன்னால் உள்ள முக்கிய சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நடவடிக்கை 

    மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக மாணவர் ஒருவர் கைது

    தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட மாணவன் அத்விக் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டுள்ளதாக புவனேஸ்வர் துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்தார்.

    இறந்து போன மாணவி, பல மாதங்களாக ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் நேபாள மாணவர்கள் முழுமையான விசாரணையைக் கோரினர் மற்றும் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யக் கோரினர்.

    பதற்றம்

    மாணவர்களிடையே அதிகரித்த பதற்றம்; நேபாள மாணவர்கள் வெளியேறும்படி உத்தரவு

    பல்கலைக்கழகத்தில் பதற்றம் அதிகரித்ததால், KIIT பல்கலைக்கழகம் அனைத்து நேபாள மாணவர்களையும் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    அந்த அறிக்கையில், "நேபாளத்தைச் சேர்ந்த அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி இன்று பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அவர்கள் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    செய்தியாளர்களிடம் பேசிய KIIT பல்கலைக்கழக பதிவாளர் ஞான ரஞ்சன் மொஹந்தி, பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்டவருடன் உறவில் இருந்ததாகக் கூறினார்.

    "அவர் விடுதியில் தங்கியிருந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தார். அவரது அறை சீல் வைக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளனர்," என்று மொஹந்தி கூறினார்.

    வெளியேற்றம்

    அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்

    நிலைமையைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம், நேபாள மாணவர்கள் உடனடியாக விடுதிகளை காலி செய்து வீடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

    "நிலைமையைக் கருத்தில் கொண்டு, நேபாள மாணவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது" என்று பல்கலைக்கழகம் மேலும் கூறியது.

    எனினும், நேபாள மாணவர்கள் எந்த பயண ஏற்பாடும் இல்லாமல் தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    "எங்களுக்கு ரயில் டிக்கெட்டுகள் அல்லது எந்த வழிமுறைகளும் வழங்கப்படவில்லை. எங்களை விடுதி பேருந்துகளில் ஏற்றி, கட்டாக் ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விரைவில் எங்கள் வீடுகளுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டது. ஊழியர்கள் விடுதிக்குள் நுழைந்து, விரைவாக வெளியேறாதவர்களைத் தாக்கினர்," என்று நேபாளத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    தற்கொலை
    பாலியல் தொல்லை

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    ஒடிசா

    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  நிதித்துறை
    சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள் சந்திரயான் 3
    பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிமுகம்  இந்தியா
    தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை

    தற்கொலை

    ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது? ராஜஸ்தான்
    ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை தமிழ்நாடு
    செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு உலகம்
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு நீட் தேர்வு

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025