NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு 
    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு

    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு 

    எழுதியவர் Nivetha P
    Oct 16, 2023
    07:22 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தினை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்கான அரசாணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.,16) வழக்கறிஞர்களிடம் வழங்கினார்.

    சென்னை உயர் நீதிமன்றம் கீழ் குற்றவியல் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், முன்சீப் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

    இந்த நீதிமன்றங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர்.

    இவர்கள் அரசு சார்பாக வழக்குகளில் ஆஜராகி வருகிறார்கள்.

    இவர்களின் கட்டண விகிதமானது கடந்த 1995ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

    அதன் பின்னர் 2006ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி பதவியேற்ற பின்னர் இவர்களுக்கான கட்டண விகிதத்தினை உயர்த்துமாறு ஓர் பரிந்துரை குழுவை 2007ம் ஆண்டு நியமித்துள்ளார்.

    அவர்களின் பரிந்துரைப்படி 2011ல் கட்டணமானது கணிசமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 

    சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது 

    அதற்கு பின்னர் கட்டண விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்று சமீபத்தில் அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்றத்தினை தவிர்த்து, சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பயன்படும் வகையில் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    தொடர்ந்து, இதற்கான அரசாணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன், ராமநாதபுரம் குற்றவியல் அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், விழுப்புரம் குற்றவியல் அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்ரமணியம், சென்னை உரிமையியல் வழக்கறிஞர் ஷாஜகான் உள்ளிட்டோரிடம் வழங்கினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    மு.க ஸ்டாலின்
    கருணாநிதி
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு

    தமிழக அரசு

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் மு.க ஸ்டாலின்
    தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும் தமிழ்நாடு
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழ்நாடு
    மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார்  தமிழகம்

    மு.க ஸ்டாலின்

    சனாதன விவகாரம் - உதயநிதிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  சென்னை
    ஜி20 மாநாடு - டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் புது டெல்லி

    கருணாநிதி

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை மெரினா கடற்கரை
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் தமிழக அரசு
    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல் தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு சென்னை

    சென்னை உயர் நீதிமன்றம்

    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு
    உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் அளித்த சென்னை உயர்நீதிமன்றம்  பா ரஞ்சித்
    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025