NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு
    தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Mar 03, 2023
    01:56 pm
    தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு
    தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு

    தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கு ஓர் முக்கியமான சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கூட்டுறவுத்துறைகளில் நடத்தும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில் பணிபுரிந்து வரும் 25 ஆயிரம் பேர்களுக்கு பல வருடங்களாக பதவியுயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஊழியர்களின் கோரிக்கையினை ஏற்ற கூட்டுறவு துறை சமீபத்தில் காலி பணியிடங்களுக்கு ஏற்ப சீனியாரிட்டி அடிப்படையில் விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளராகவும், உரம் விற்பனையாளராகவும், எடையாளருக்கு விற்பனையாளராகவும் பதவி உயர்வு வழங்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை பலவ சங்கங்கள் முறையாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

    2/2

    பதவியுயர்வு வழங்கப்பட்ட விவரங்களை அனுப்பி வைக்க உத்தரவு

    இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், மண்டல இணை பதிவாளர்களுக்கு ஓர் சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், நீதிமன்ற ஆணையில் தகுதியுள்ள விற்பனையாளர், எடையாளர்களுக்கு பதவி உயர்வினை வழங்கிவிட்டு, பின்னர் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்றார் போல் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் வாயிலாக ஆட்களை புதிதாக நியமித்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் தகுதியுள்ள விற்பனையாளர், எடையாளருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்ட விவரங்களை அனுப்பி வைக்குமாறும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம் காவல்துறை
    கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி கோவை
    கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி கோவை
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி

    தமிழக அரசு

    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு அறநிலையத்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ திண்டுக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023