NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை
    ராகுல் காந்தியுடன் யாத்திரையில் இணைந்த பிரியங்கா காந்தி

    26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை

    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தனது 'ஜோடோ யாத்திரை'யை துவக்கினார்.

    இந்தியாவின் மிகமுக்கியமான அரசியல் பாதயாத்திரையாக கருதப்படும் இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து சென்று 3000 கிலோ மீட்டர் நிறைவு பெற்றுள்ளது.

    இடையில் 9 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட இந்த பாதயாத்திரை மீண்டும் இன்று உத்தரப்பிரதேசத்தில் துவங்கி 120 கி.மீ. தூரம் செல்லவுள்ளது.

    இதில் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்கிறார், உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் யாத்திரை முழுவதிலும் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 26ம் தேதி காஷ்மீர் ஸ்ரீ நகரில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி தனது யாத்திரையை முடிக்கிறார்.

    அதிகளவில் பெண்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பு

    பிரியங்கா காந்தி தலைமையில் 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை

    இதனை தொடர்ந்து, பிரியங்கா காந்தி 2 மாத பாத்தியாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி, ராகுல் காந்தி யாத்திரையை முடித்தவுடன் ஆரம்பிக்கவுள்ள பிரியங்காவின் இந்த பாதயாத்திரை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறுகையில், "ஜோடோ யாத்திரை முடிந்தவுடன் அதன் நோக்கம் குறித்து மக்களிடம் தெரிவிக்க 'ஹாத் சே ஹாத் ஜோடோ' என்னும் யாத்திரையை காங்கிரஸ் துவங்கவுள்ளது.

    இதற்கு பிரியங்கா காந்தி தலைமை தாங்குவார். ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும் யாத்திரையை மேற்கொள்வார்,

    இந்த யாத்திரிரையில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.

    இதன் மூலம், பணவீக்கம் எந்த அளவிற்கு நடுத்தர மக்களை பாதிக்கிறது என்று பெண்கள் மத்தியில் பிரியங்கா காந்தி எடுத்துரைப்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி பாஜக
    விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்! உலகம்
    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! தமிழ்நாடு
    விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து! கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025