NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை
    இந்தியா

    26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை

    26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை
    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023, 04:37 pm 1 நிமிட வாசிப்பு
    26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை
    ராகுல் காந்தியுடன் யாத்திரையில் இணைந்த பிரியங்கா காந்தி

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தனது 'ஜோடோ யாத்திரை'யை துவக்கினார். இந்தியாவின் மிகமுக்கியமான அரசியல் பாதயாத்திரையாக கருதப்படும் இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து சென்று 3000 கிலோ மீட்டர் நிறைவு பெற்றுள்ளது. இடையில் 9 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட இந்த பாதயாத்திரை மீண்டும் இன்று உத்தரப்பிரதேசத்தில் துவங்கி 120 கி.மீ. தூரம் செல்லவுள்ளது. இதில் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்கிறார், உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் யாத்திரை முழுவதிலும் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி காஷ்மீர் ஸ்ரீ நகரில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி தனது யாத்திரையை முடிக்கிறார்.

    பிரியங்கா காந்தி தலைமையில் 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை

    இதனை தொடர்ந்து, பிரியங்கா காந்தி 2 மாத பாத்தியாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி, ராகுல் காந்தி யாத்திரையை முடித்தவுடன் ஆரம்பிக்கவுள்ள பிரியங்காவின் இந்த பாதயாத்திரை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறுகையில், "ஜோடோ யாத்திரை முடிந்தவுடன் அதன் நோக்கம் குறித்து மக்களிடம் தெரிவிக்க 'ஹாத் சே ஹாத் ஜோடோ' என்னும் யாத்திரையை காங்கிரஸ் துவங்கவுள்ளது. இதற்கு பிரியங்கா காந்தி தலைமை தாங்குவார். ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும் யாத்திரையை மேற்கொள்வார், இந்த யாத்திரிரையில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இதன் மூலம், பணவீக்கம் எந்த அளவிற்கு நடுத்தர மக்களை பாதிக்கிறது என்று பெண்கள் மத்தியில் பிரியங்கா காந்தி எடுத்துரைப்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    இந்தியா

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023