NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
    எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளில் பிரதமர் மோடி நினைவஞ்சலி

    ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 17, 2025
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பிரதமர் மோடி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

    ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், எம்ஜிஆரின் அரசியல் பயணத்தை விளக்கும் ஒரு சிறிய வீடியோவையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.

    இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுகாதாரம், தொழில் பயிற்சி, பெண்கள் மேம்பாடு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்திய தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் எம்ஜிஆர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவு

    திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம். pic.twitter.com/tOmi8ZpAlB

    — Narendra Modi (@narendramodi) January 17, 2025

    அதிமுக

    அதிமுக அறிக்கை

    எம்ஜிஆரின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் அதிமுக அவரை ஏழைகளுக்காகவே துடித்த பெரும் இதயம் என்று குறிப்பிட்டு நினைவுகூர்ந்துள்ளது.

    ஜனவரி 17, 1917 அன்று இலங்கையின் கண்டியில் கேரள நாயர் குடும்பத்தில் பிறந்த எம்ஜிஆர், வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு மாறினார்.

    1972இல் அப்போதைய திமுக தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி அதிமுகவை நிறுவி, ஒரு தசாப்த காலம் (1977-1987) தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

    சதி லீலாவதி, மலைக்கள்ளன், ரிக்‌ஷாக்காரன் போன்ற வெற்றிப் படங்கள் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற திரைப்பட வாழ்க்கையில் அடங்கும். சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் அவர் வென்றுள்ளார்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பு அவருக்கு 1988 ஆம் ஆண்டு மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருதைப் பெற்றுத் தந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்ஜிஆர்
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி
    அதிமுக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    எம்ஜிஆர்

    சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு  அதிமுக
    நண்பர்கள் தினம் : அரசியலில் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் நட்பு பாராட்டிய அரசியல் தலைவர்கள் நட்பு
    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை மு.க ஸ்டாலின்
    'நாளை நமதே' திரைப்பட பிரபலம், பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார் தெலுங்கு திரையுலகம்

    நரேந்திர மோடி

    இந்திய பொருட்களை வாங்குங்கள்; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    விவசாயிகளுக்கு ரூ.2000; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி விவசாயிகள்
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி பிரிக்ஸ்
    BRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம் பிரதமர்
    ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் உணவுகள்: சக்-சக், கொரோவை பற்றி தெரிந்துகொள்வோம் ரஷ்யா
    5 ஆண்டுகளுக்கு பின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை  ஜி ஜின்பிங்

    அதிமுக

    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி  திமுக
    விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ? தேமுதிக
    கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா
    அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025