NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு 
    இந்த விஷயத்தில் குடியரசு தலைவரின் தலையீட்டையும் எதிர்க்கட்சிகள் கோரின

    மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 01, 2023
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கவலைகளை கேட்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புக்கொண்டார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை விடுத்ததை அடுத்து, நாளை காலை 11 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    மேலும், மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பிஜேயுள்

    மணிப்பூர் விஷயத்தில் குடியரசு தலைவரின் தலையீட்டை கோரிய எதிர்க்கட்சிகள் 

    மணிப்பூரில் நடந்த வன்முறைகளால் அந்த மாநிலம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்றும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

    இதனையடுத்து, இந்த விஷயத்தில் குடியரசு தலைவரின் தலையீட்டையும் அவர்கள் கோரினர்.

    மேலும், 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்று கடந்த வார இறுதியில் மணிப்பூரின் நிலைமையை நேரில் சென்று பார்வையிட்டது.

    அப்போது, இரண்டு நாட்கள் பயணமாக மணிப்பூர் சென்றிருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினர்.

    நாளை குடியரசு தலைவருடனான சந்திப்பின் போது, மணிப்பூரில் நடக்கும் வன்முறைகள், மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போன்றவை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கவலை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரௌபதி முர்மு
    எதிர்க்கட்சிகள்
    மணிப்பூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பெங்களூர்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  இந்தியா
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  சோனியா காந்தி

    மணிப்பூர்

    "மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள்  பளுதூக்குதல்
    மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்  முதல் அமைச்சர்
    "மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்கக்கேடு; குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025