NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரபிரதேசத்தில் அதிகார மாற்றமா? 6 இண்டியா கூட்டணி எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரபிரதேசத்தில் அதிகார மாற்றமா? 6 இண்டியா கூட்டணி எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் 

    உத்தரபிரதேசத்தில் அதிகார மாற்றமா? 6 இண்டியா கூட்டணி எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 11, 2024
    07:42 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும்(பாஜக) இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    பாஜக கூட்டணியை விட இண்டியா கூட்டணி அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 இண்டியா எம்பிக்கள் மீது ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கிரிமினல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதால், அவர்களின் சமீபத்திய வெற்றியை இது சீர்குலைக்கக்கூடும்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களில் காஜிப்பூர் எம்பி அப்சல் அன்சாரியும் ஒருவர் ஆவார். இவர் இதற்கு முன்பு குண்டர் சட்ட வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்றவர். அவரது தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி, பொதுத் தேர்தலில் பங்கேற்க அனுமதித்தது.

    இந்தியா 

    கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள எம்பிக்கள் 

    இந்த வழக்கு ஜூலை மாதம் மறுபரிசீலனை செய்யப்படும், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அன்சாரி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.

    குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள மற்ற எம்.பி.க்களில் அசம்கரை சேர்ந்த தர்மேந்திர யாதவ் மற்றும் ஜான்பூரை சேர்ந்த பாபு சிங் குஷ்வாஹா ஆகியோர் அடங்குவர்.

    சுல்தான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராம்புவால் நிஷாத், எட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார். அதில் ஒன்று குண்டர் சட்டத்தின் கீழ் வரும்.

    சண்டௌலியின் எம்பி வீரேந்திர சிங் மற்றும் சஹாரன்பூர் எம்பி இம்ரான் மசூத் ஆகியோர் மீதும் பல குற்ற வழக்குகள் உள்ளன.

    இந்த எம்பிக்கள் மீதான குற்றச்சாட்டுகள் பணமோசடி, மிரட்டல் முதல் குண்டர் சட்டத்தை மீறுதல் வரை வேறுபடுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    உத்தரப்பிரதேசம்

    இரண்டு மாதத்திற்கு பின்னர், பனாரஸ் ஐஐடி மாணவி வல்லுறவு வழக்கில் மூவர் கைது பாலியல் வன்கொடுமை
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை அயோத்தி
    ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலம் ரத்து  அயோத்தி
    'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ் அயோத்தி

    இந்தியா

    அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் SKM கட்சியும் வெற்றிபெற உள்ளன  அருணாச்சல பிரதேசம்
    சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது ஆளும் கட்சியான SKM சிக்கிம்
    புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர்  புனே
    விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025