NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்
    முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்

    தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 06, 2023
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல கவிஞரும், முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதியுமான கதர் என அழைக்கப்படும் கும்மாடி வித்தல் ராவ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

    அவருக்கு வயது 77. அவருக்கு விமலா என்ற மனைவியும், சூர்யா, சந்திரா என்ற இரு மகன்களும், வெண்ணிலா என்ற மகளும் உள்ளனர்.

    அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கதர் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 20 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆகஸ்ட் 3 ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து அதிலிருந்து குணமடைந்தார். இருப்பினும், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவர் தனது இறுதி மூச்சை விட்டார்." என்று தெரிவித்துள்ளது.

    gaddar background

    கும்மாடி வித்தல் ராவ் எனும் கதரின் பின்னணி

    1946 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள காமரெட்டி மாவட்டத்தில் டூப்ரானில் பிறந்த கதர், நக்சலைட்டுகளின் மக்கள் போர்க் குழுவின் கலாச்சார அமைப்பான ஜன நாட்டிய மண்டலியின் நிறுவனராக இருந்தார்.

    பின்னர் அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக (மாவோயிஸ்ட்) மாறியது. கவிஞரான அவர், புரட்சிகர பாடல்களை எழுதி, இசையமைத்து மேடைகளில் பாடினார்.

    அவரது பாடல்கள் பல இளைஞர்களை மாவோயிசத்திற்கு அழைத்துச் செல்ல தூண்டியது. 2010ல் மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து விலகிய அவர், 2017ல் மாவோயிஸ்டுகளுடனான தனது உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டதாக அறிவித்தார்.

    தேர்தல் அரசியலுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வந்த கதர், 2018ல் தன்னை வாக்காளராகப் பதிவு செய்து, அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹைதராபாத்
    தெலுங்கானா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025