NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பிரச்சாரம் செய்ததால் பாஜக அண்ணாமலை மீது வழக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பிரச்சாரம் செய்ததால் பாஜக அண்ணாமலை மீது வழக்கு

    அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பிரச்சாரம் செய்ததால் பாஜக அண்ணாமலை மீது வழக்கு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 12, 2024
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்றிரவு 10 மணி நேரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்ததால் பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை மீது கோவை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

    சட்டவிரோதமாக ஒன்றுகூடியது, தவறான கட்டுப்பாடு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக பாஜக பிரச்சாரம் நடத்தியதால், திமுக மற்றும் இடதுசாரி கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

    "சட்டப்பிரிவு 143, 341 மற்றும் 290 இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் தாக்குதல் புகாரின் அடிப்படையில் பாஜக மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    பாஜக 

    "அண்ணாமலையின் வெற்றியைத் தடுக்கும் சதி": ஏஎன்எஸ் பிரசாத்

    "தோல்வி பயத்தில் அண்ணாமலை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு கலவரத்தை தூண்டுகிறார்." என்று திமுக செய்தி தொடர்பாளர் ஏ.சரவணன் கூறியுள்ளார்.

    "ஆணவத்தைப் பற்றி பேசும் பிரதமர் அண்ணாமலைக்கு அந்த ஞானத்தை கொடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அண்ணாமலை, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்.

    "இரவு 10 மணிக்குப் பிறகு மக்களைச் சந்திக்க எனக்கு முழு உரிமை உள்ளது. எந்த தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை போட்டது. அந்த உத்தரவு எங்கே, நீங்கள் எனக்குக் காட்டுங்கள்?" என்று அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

    "இது அண்ணாமலையின் வெற்றியைத் தடுக்கும் சதி. திமுக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது" என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    பாஜக அண்ணாமலை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பாஜக

    பாஜகவில், தன்னுடைய கட்சியை இணைத்தது ஏன் என்பது குறித்து சரத்குமார் விளக்க அறிக்கை சரத்குமார்
    குடியரசு தலைவர் ஒப்புதல்: சட்டமானது உத்தரகாண்டின் பொது சிவில் சட்டம்  குடியரசு தினம்
    அரசியலில் இறங்கும் மற்றுமொரு ராஜ வம்சம்: கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் யதுவீர் வாடியார் கர்நாடகா
    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது POCSO வழக்கு பதிவு கர்நாடகா

    பாஜக அண்ணாமலை

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு திமுக
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025