NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  

    'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2024
    08:36 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அந்த நினைவிடத்திற்குச் சென்ற ​​பிரதமர் மோடி, "தனது ஒவ்வொரு நிமிடமும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும்" என்று அங்கிருந்த வருகையாளர்கள் கையேட்டில் எழுதினார்.

    "இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குச் சென்றதன் மூலம் நான் ஒரு தெய்வீக மற்றும் அசாதாரண ஆற்றலை உணர்கிறேன். இந்த நினைவிடத்தில், பார்வதி தேவியும் சுவாமி விவேகானந்தரும் தவம் செய்தனர். பின்னர், ஏக்நாத் ரானடே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நிலைநாட்டி உயிர்ப்பித்தார். இந்த இடம் ஒரு நினைவிடமாக உள்ளது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    இந்தியா 

    திருவள்ளுவர் சிலைக்கு சென்று மரியாதை செலுத்திய பிரதமர் மோடி 

    "ஆன்மீக மறுமலர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர், எனது உத்வேகமாகவும், எனது ஆற்றல் மூலமாகவும், எனது பயிற்சியின் அடித்தளமாகவும் இருந்தார். நாடு முழுவதும் பயணம் செய்த சுவாமி விவேகானந்தர், இந்த இடத்தில் தியானம் செய்தார். அங்கு அவருக்கு ஒரு புதிய வழி கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரின் இலட்சியங்கள் இந்தியாவை வடிவமைத்து வருவதால், இந்தப் புனிதமான இடத்தில் பயிற்சி செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்" என்று பிரதமர் மோடி அந்த கையேட்டில் எழுதியுள்ளார்.

    தனது தியான அமர்வை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, வெள்ளை உடை அணிந்து, விவேகானந்தர் பாறைக்கு அருகில் அமைந்துள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு சென்று, அங்கு அவருக்கு பெரிய மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    இந்தியா
    கன்னியாகுமரி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் மோடி
    பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு பூட்டான்
    தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி  தமிழ்நாடு
    'கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி': காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி  இந்தியா

    இந்தியா

    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா  இஸ்ரேல்
    பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்  வெளியுறவுத்துறை
    லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு  லண்டன்
    குடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது பாஜக

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025