NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை
    9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை

    9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை

    எழுதியவர் Nivetha P
    Oct 13, 2023
    03:56 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா நாட்டின் ஜி20 பிரெசிடென்சியின் பரந்த கட்டமைப்பின் கீழ் பாராளுமன்றத்தால் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி நாட்டின் 9வது ஜி20 நாடாளுமன்ற உச்சி மாநாட்டினை(பி20) பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.,13) டெல்லியில் துவக்கி வைத்தார்.

    அப்போது பேசிய அவர், 'இது உலகின் நாடாளுமன்ற நடைமுறைகளின் 'மகாகும்பம்'. 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்' என்று தனது உரையினை துவங்கினார்.

    அதன் பின் அவர், 'இந்த ஜி20 மாநாடு நமது நாட்டு மக்களின் சக்தியினை கொண்டாடும் ஊடகமாக அமைந்துள்ளது' என்றும்,

    'ஜனநாயகத்தின் தாய் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இந்த பி20 மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றும் பேசினார்.

    உரை 

    'இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம்' - மோடி 

    தொடர்ந்து அவர் பேசுகையில்,'தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் மோதல்கள் யாருக்கும் பயனளிக்கப்போவதில்லை' என்று இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே நடக்கும் போரினை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    தற்போதைய சூழலில் இந்த போரால் இரு நாடுகளிலும் 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியவை.

    மேலும் அவர், 'இந்த பிளவுபட்ட உலகம் நம் கண்முன் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை வழங்காது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம். அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டிய நேரம், ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம்' என்றும்,

    'இது அனைவரது வளர்ச்சி மற்றும் நலனுக்கான நேரம்' என்றும் கூறியுள்ளார்.

    இதனிடையே இந்த உச்சி மாநாட்டில் ஜி20-உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த மாநாட்டின் கருப்பொருள் என்னவென்றால்,'ஒரு பூமி, ஒரு குடும்பம், எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்'என்பவையாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    இந்தியா
    ஜி20 மாநாடு
    உலகம்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    நரேந்திர மோடி

    பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு  இந்தியா
    ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்
    இந்தியாவில் ஜனநாயக திருவிழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    "பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி பிரதமர் மோடி

    இந்தியா

    ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் இஸ்ரேல்
    போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார் மாநிலங்களவை
    ரூ.23,000 கோடி மதிப்பில் புதிய ராணுவத் தளவாடங்களை வாங்கிய இந்தியா இந்தியா-சீனா மோதல்
    கனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கனடா

    ஜி20 மாநாடு

    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை குடியரசு தலைவர்
    ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன? சீனா
    'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்  அமெரிக்கா
    ஜி20 உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் 29 நாடுகளின் பாரம்பரியச் சின்னங்கள் இந்தியா

    உலகம்

    அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன்
    மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள் பிரான்ஸ்
    இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா  கனடா
    அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் கெவின் மெக்கார்த்தி  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025