NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை
    இந்த ரயில்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகள், கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.

    இன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை

    எழுதியவர் Sindhuja SM
    Sep 24, 2023
    10:30 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு 9 வந்தே பாரத் ரயில்களை ஆன்லைன் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இந்த ரயில்களின் துவக்கம் 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும்.

    ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்று இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    இந்த வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் நாட்டில் ஒரு புதிய தரமான ரயில் சேவையை அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும் இந்த ரயில்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகள், கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.

    டக்வ்ஜ்க

    இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட இருக்கும் புதிய ரயில்கள்:

    -திருநெல்வேலி-மதுரை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;

    -விஜயவாடா - சென்னை(ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;

    -ஹைதராபாத்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;

    -காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;

    -உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;

    -பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;

    -ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;

    -ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;

    -ஜாம்நகர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.

    டவ்ஞ்சல்

    திருநெல்வேலி-மதுரை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

    திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், செவ்வாய்க் கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் இயங்கும்.

    இது திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1:50 மணியளவில் சென்னையை சென்றடையும்.

    அதன் பின், பிற்பகல் 2:50 மணிக்கு சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இந்த ரயில் சராசரியாக 83.30 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு விழுப்புரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் நிறுத்தப்படும்.

    சென்னை நெல்லை பயணம் செய்வதற்கான கட்டணம்:

    சாதாரண ஏசி சேர் கார்- 665 ரூபாய்

    எக்ஸிகியூட்டிவ் சேர் கார்- 3,025 ரூபாய்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வந்தே பாரத்
    திருநெல்வேலி
    மதுரை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சென்னை

    தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை  பண்டிகை
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேமுதிக
    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம் தமிழ்நாடு
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் பயணம்

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ஆட்டோமொபைல்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை மாவட்ட செய்திகள்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    மதுரை

    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை  சித்திரை திருவிழா
    மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்  சித்திரை திருவிழா
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025