NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 02, 2024
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கும் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    "குடியரசு தலைவரின் உரை குறித்து பல எம்.பி.க்கள் நேற்றும், இன்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அவையின் அனைத்து விதிகளையும் பின்பற்றி குடியரசு தலைவர் உரை குறித்து கருத்து தெரிவித்த முதல்முறை எம்.பி.க்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

    இதற்கிடையில், பிரதமர் மோடியின் உரையின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபை உள்பகுதிக்குள் நுழையுமாறு கேட்டுக் கொண்டதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

     மக்களவையின் பேசினார் பிரதமர் மோடி 

    #WATCH | PM Narendra Modi replies to Motion of Thanks on the President's Address, in the Lok Sabha

    He says "Yesterday and today, several MPs have expressed their views of the President's address, especially those who have come among us for the first time as Parliamentarians.… pic.twitter.com/yeLlcxFv67

    — ANI (@ANI) July 2, 2024

    இந்தியா 

    'நாடு தான் எங்களுக்கு முதலில் முக்கியம்': பிரதமர் மோடி 

    எதிர்க்கட்சித் தலைவர்களின் கூச்சலுக்கு மத்தியில், "நாங்கள் கொள்கை மற்றும் நிர்வாகத்தால் இந்தியாவை முதன்மையாக வைத்திருக்கிறோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

    "குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க நான் இங்கு வந்துள்ளேன். நமது குடியரசுத் தலைவர் தனது உரையில் எங்களது விக்சித் பாரதத்தின் தீர்மானத்தை விவரித்தார். மாண்புமிகு குடியரசுத் தலைவர் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பி, நம்மையும் நாட்டையும் திறமையாக வழிநடத்தியுள்ளார்" என்று பிரதமர் தெரிவித்தார்.

    "தேசத்தை முதலில் வைக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே நோக்கமாகும். எங்கள் பணிகள் மற்றும் கொள்கைகள் இந்த நோக்கத்தையும் இலக்கையும் நோக்கியே உள்ளன. நாட்டின் நலனுக்கு அவசியமான ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் நாங்கள் செய்துள்ளோம் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

    இந்தியா 

    'பொய்களை பரப்பி படு பயங்கரமாக தோற்றவர்கள்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி 

    "கடந்த 10 ஆண்டுகளில், 'சப்கா சத் சப்கா விகாஸ்' என்ற நோக்கத்துடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நாடு நீண்ட காலமாக சமாதான அரசியலை மட்டுமே பார்த்து வந்தது. இந்நிலையில், சமாதான அரசியல் பேசாமல், சந்துஷ்டிகரன்(திருப்தி) என்ற கொள்கையுடன் நாம் இன்று முன்னேறி இருக்கிறோம்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மேலும், தொடர்ந்து பொய்களை பரப்பி படு பயங்கரமாக தோற்றவர்களின் வலியை தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் இன்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    பிரதமர் மோடி பேசும்போது, ​​எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு முழக்கங்களை எழுப்பினர். அதனையடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை கண்டித்தார்.

    இந்தியா 

    கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசாங்கம் செய்த சாதனைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு 

    2014 ஆம் ஆண்டு எனது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், நாடு ஊழலால் பாதிக்கப்பட்டிருந்தது என்று பிரதமர் கூறினார்.

    "2014ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது ஊழலைப் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்று கூறியிருந்தோம். ஊழல் நாட்டை கரையான்கள் போல நாசமாக்கியது. இருப்பினும், ஊழலைப் பொறுத்துக் கொள்ளாத எங்களின் அணுகுமுறைக்கு நாட்டு மக்கள் எங்களை ஆசிர்வதித்துள்ளனர்," என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசாங்கம் செய்த வெற்றிகள் மற்றும் சாதனைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    பிரதமர் மோடி
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மக்களவை

    பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, சட்டப்பிரிவு 370 நீக்கம்: பாஜகவின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டினார் பிரதமர் மோடி  இந்தியா
    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை  தேர்தல்
    மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக தேர்தல்
    மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு பாஜக

    பிரதமர் மோடி

    பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள்  இந்தியா
    பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்பார் என தகவல்  பாஜக
    மோடி 3.0: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் மோடி  மோடி
    முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார் காங்கிரஸ்

    இந்தியா

    கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு  கமல்ஹாசன்
    பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம்  பீகார்
    நீட் தேர்வு மோசடி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ  சிபிஐ
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025