Loading...
வினாத்தாள் கசிவுக்கு கடுமையான தண்டனை: நள்ளிரவு வெளியான பிரதமர் மோடியின் வீடியோ செய்தி
விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்

வினாத்தாள் கசிவுக்கு கடுமையான தண்டனை: நள்ளிரவு வெளியான பிரதமர் மோடியின் வீடியோ செய்தி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2026
06:49 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் தலைமையிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். வியாழக்கிழமை இரவு வெளியிட்ட சிறப்பு வீடியோ செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி, "வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல; இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என்று குறிப்பிட்டார். கடந்த இரண்டரை மாதங்களில் தவறு செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மறுதேர்வு

"மாணவர்களின் ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தடுப்பதே அரசின் உடனடி முன்னுரிமை"

மாணவர்களின் ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தடுப்பதே அரசின் உடனடி முன்னுரிமையாக இருந்தது எனக் கூறிய பிரதமர், சுமார் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை அரசு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி உடனடியாக நடத்தியதாகத் தெரிவித்தார்.

ஜூலை 19 அன்று வெளியான தேர்வு முடிவுகள் மாணவர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், அரசு இத்துடன் நின்றுவிடாது என்று அவர் வலியுறுத்தினார்.

வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரித்து கடுமையான தண்டனை வழங்குவதற்கான புதிய சட்ட வரைவுத் திட்டத்தை விரைவாக தயாரிக்குமாறு அரசுத் துறைகளுக்கு பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி இரவோடு இரவாக தயாரிக்கப்பட்ட புதிய அவசரச் சட்ட வரைவு, வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT

விமர்சனம்

எதிர்க்கட்சிகள் மற்றும் CJP-ன் கண்டனம்

வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்திலேயே இந்த மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி என CJP மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ராகுல் காந்தி,"கல்வி அமைப்பைச் சீரழித்த பொறுப்பில் இருந்து அரசு தப்ப முடியாது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT