NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 
    இந்த கட்டிடத்தில் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில் இருக்கும்.

    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    May 16, 2023
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

    ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 2014இல் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற அதே நாளில், மே 28 அன்று, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

    எனினும், வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறாது.

    2023 ஆம் ஆண்டிற்கான ஜி20 தலைவர் பதவியை இந்தியா பெற்றிருப்பதை அடுத்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் கூட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டம் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    details

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் 

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் ஜனவரி 15, 2021 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 2022 வரை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

    64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நான்கு மாடி கட்டிடத்தில் 1,224 எம்.பி.க்கள் தங்கலாம்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மூன்று முக்கிய வாயில்கள் உள்ளன. அவைகளுக்கு கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில் இருக்கும்.

    அரசியலமைப்பு மண்டபம், இந்த கட்டிடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பின் அசல் பதிப்பு, அரசியலமைப்பு மண்டபத்தில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? வாட்ஸ்அப்
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது கர்நாடகா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை மேற்கு வங்காளம்
    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்? ஹூண்டாய்

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    பிரதமர் மோடி

    ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆஸ்கார் விருது
    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மு.க ஸ்டாலின்
    பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர் விருது விழா
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது ஜம்மு காஷ்மீர்

    நரேந்திர மோடி

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியா
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025