NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    இந்தியா

    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023, 02:51 pm 1 நிமிட வாசிப்பு
    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    டெல்லியின் மிகப்பெரிய பழங்குடியின திருவிழாவான 'ஆதி மஹோத்சவத்தை' மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 16) தொடங்கி வைத்தார். மேலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவுக்கு மலர் தூவி அவர் மரியாதையும் செலுத்தினார். பழங்குடி சமூகத்தின் நடைமுறைகள் மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "அவர்களின் தயாரிப்பு பொருட்கள் மூலம் பல்வேறு கலைகள், கலைப்பொருட்கள், இசை மற்றும் கலாச்சார காட்சிகளை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். இந்தியாவின் பன்முகத்தன்மையும் அதன் மகத்துவமும் ஒன்றிணைந்து அதன் பாரம்பரியத்தை தலைநிமிர்ந்து நிற்க செய்துள்ளது." என்று கூறினார்.

    விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனா திட்டம்

    பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், வணிகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவற்றை கொண்டாடும் வகையில் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட்(TRIFED) இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த ஆண்டு, பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் 2023-24இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனா திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார். பழங்குடியின மக்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் உதவியை இந்த விஸ்வகர்மா திட்டம் வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் பழங்குடியினரால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1000 பழங்குடி கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    பழங்குடியினர்
    டெல்லி

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    பழங்குடியினர்

    மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம்  இந்தியா

    டெல்லி

    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்
    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023