NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023
    02:51 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் மிகப்பெரிய பழங்குடியின திருவிழாவான 'ஆதி மஹோத்சவத்தை' மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 16) தொடங்கி வைத்தார்.

    மேலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவுக்கு மலர் தூவி அவர் மரியாதையும் செலுத்தினார்.

    பழங்குடி சமூகத்தின் நடைமுறைகள் மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

    தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "அவர்களின் தயாரிப்பு பொருட்கள் மூலம் பல்வேறு கலைகள், கலைப்பொருட்கள், இசை மற்றும் கலாச்சார காட்சிகளை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். இந்தியாவின் பன்முகத்தன்மையும் அதன் மகத்துவமும் ஒன்றிணைந்து அதன் பாரம்பரியத்தை தலைநிமிர்ந்து நிற்க செய்துள்ளது." என்று கூறினார்.

    டெல்லி

    விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனா திட்டம்

    பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், வணிகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவற்றை கொண்டாடும் வகையில் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட்(TRIFED) இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகிறது.

    இந்த ஆண்டு, பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் 2023-24இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனா திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார்.

    பழங்குடியின மக்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் உதவியை இந்த விஸ்வகர்மா திட்டம் வழங்குகிறது.

    இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் பழங்குடியினரால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1000 பழங்குடி கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஜம்மு காஷ்மீர்
    இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை
    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா மும்பை
    வீடியோ: குடி போதையில் காரை இடித்து 3 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற லாரி டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025