NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி எச்சரிக்கை

    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 27, 2024
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தின் 115வது எபிசோடில், இன்று (அக்டோபர் 27) உரையாற்றினார்.

    சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி வழக்குகள், குறிப்பாக டிராய், காவல்துறை, சுங்கத்துறை அல்லது ஆர்பிஐ அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து எச்சரித்தார்.

    இதற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும், பலர் தொடர்ந்து இந்த மோசடி கும்பலுக்கு இலக்காகி வரும் நிலையில், இதுபோன்ற அழைப்புகளை எதிர்கொள்ளும் போது முதலில் பதற்றப்பபடக் கூடாது என மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்த "நில், சிந்தி, செயல்படு" அணுகுமுறையை அவர் பரிந்துரைத்தார்.

    வீடியோ அழைப்புகள்

    வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணை கிடையாது

    எந்த ஒரு உண்மையான புலனாய்வு நிறுவனமும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளைத் தொடர்புகொள்வதில்லை என்பதை பிரதமர் மோடி நினைவூட்டினார்.

    இதைத் தவிர, இந்தியாவின் அடையாளங்களாக விளங்கும் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய அளவிலான கொண்டாட்டங்களை பிரதமர் அறிவித்தார்.

    தேசிய ஒற்றுமைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டுக்கு தனது சமீபத்திய பயணத்தை நினைவு கூர்ந்தார்.

    இந்தியாவின் வளர்ந்து வரும் அனிமேஷன் துறை குறித்தும் பேசிய பிரதமர் மோடி, உலக அனிமேஷன் தினம் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவை ஒரு அனிமேஷன் அதிகார மையமாக முன்னிறுத்துவதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு மக்களை வலியுறுத்தி உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    சைபர் கிரைம்
    சைபர் பாதுகாப்பு
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நரேந்திர மோடி

    "தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள்" என்று கூறிய காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி கண்டனம்  காங்கிரஸ்
    ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் பிரதமர் மோடி
    2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் மன்மோகன் சிங்

    சைபர் கிரைம்

    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் பாதுகாப்பு
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு சைபர் பாதுகாப்பு
    இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல் சைபர் பாதுகாப்பு
    IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு சைபர் பாதுகாப்பு

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன கூகுள்
    இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை சைபர் கிரைம்

    இந்தியா

    நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரிப்பு ஆட்டோமொபைல்
    பிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொள்வதாக அறிவிப்பு; ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்குமா? பிரிக்ஸ்
    வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பரபரப்பு குற்றச்சாட்டு கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025