NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்!
    கொரோனா மீட்பிற்கு கிட்டத்தட்ட 7,700 கோடி செலவு (படம்: The Indian Express)

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022
    12:54 am

    செய்தி முன்னோட்டம்

    2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் PM கேர்ஸ் நலத்திட்டத்திற்கு நிதி அளிக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

    இந்த நலத்திட்டத்தின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை மதிப்பாய்வு செய்து அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.

    வெளியிடப்பட்ட செய்தியின் முக்கிய புள்ளிகள்:

    இந்த நிதியில் 60% கொரோனா மீட்பிற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

    மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பது, அரசு மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர்களை வழங்குவது, தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பது போன்ற பல்வேறு கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்த 60% (கிட்டத்தட்ட 7,700 கோடி) செலவிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு நிதி வரத்து குறைந்துள்ளது.

    நிதி பரிவர்த்தனை

    நிதியின் வரவு செலவுகள்:

    பெறப்பட்ட நிதியின் தகவல்கள்:

    2020-21ஆம் நிதியாண்டில் ரூ.7,183 கோடி உள்நாட்டு நிதியும் ரூ.495 கோடி வெளிநாட்டு நிதியும் பெறப்பட்டுள்ளது.

    2021-22ஆம் நிதியாண்டில் ரூ.1,897 கோடி உள்நாட்டு நிதியும் ரூ.41 கோடி வெளிநாட்டு நிதியும் பெறப்பட்டுள்ளது.

    2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த PM கேர்ஸ் நலத்திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, இதற்கான முதலாம் நிதியை(ரூ.2.25 லட்சம்) பிரதமர் நரேந்திர மோடி தனது தனிப்பட்ட வருவாயில் இருந்து வழங்கியுள்ளார்.

    கொரோனாவுக்கு செலவழிக்கப்பட்ட நிதியின் தகவல்கள்(கோடிகளில்):

    வென்டிலேட்டர்கள்- ரூ.1,311+ரூ.835( 2 ஆண்டுகள்)

    ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிப்பு-ரூ.1703

    ஆக்சிஜன் செறிவூட்டிகள்-ரூ.500

    SpO2 ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அமைப்புகள்-ரூ.322

    மருத்துவனை கட்டிடங்கள்/மெத்தைகள்-ரூ.96

    லீகுய்ட் ஆக்சிஜன் உபகரணங்கள்- ரூ.190

    கோவிட் மருத்துவமனைப் புதுப்பித்தல்-ரூ.68

    தடுப்பூசிகள்-ரூ.1,392

    புலம்பெயர்ந்தவர்கள்/யூனியன் பிரதேசங்களின் நலனுக்காக-ரூ.1,000

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல் முடிவு
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! தொழில்நுட்பம்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025