NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்
    இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா?

    இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 10, 2025
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

    அந்த வகையில், இந்திய விமானப்படை பெண் விமானி ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவானி சிங் பாகிஸ்தான் படைகளால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தகவல் வைரலாக பரவிய நிலையில், அந்த கூற்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு குழு மறுத்துள்ளது.

    பிஐபி உண்மை சரிபார்ப்பு நிறுவனம் இந்தக் கூற்று போலி என்று திட்டவட்டமாகக் கூறியது, மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களை எச்சரித்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிஐபி உண்மை சரிபார்ப்பு மையத்தின் எக்ஸ் பதிவு

    Indian Female Air Force pilot has NOT been captured🚨

    Pro-Pakistan social media handles claim that an Indian Female Air Force pilot, Squadron Leader Shivani Singh, has been captured in Pakistan.#PIBFactCheck

    ❌ This claim is FAKE!#IndiaFightsPropaganda@MIB_India… pic.twitter.com/V8zovpSRYk

    — PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2025

    இந்திய வீரர்கள்

    இந்திய வீரர்கள் அழுவது போல் பரப்பப்பட்ட போலி வீடியோ

    மற்றொரு வைரல் பதிவில், இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தங்கள் நிலைகளைக் கைவிடும்போது அழுததாக பரப்பப்பட்ட வீடியோவும் சித்தரிக்கப்பட்டது என்று பிஐபி தெளிவுபடுத்தியது.

    உண்மையில், இந்திய ராணுவத்தில் தங்கள் தேர்வைக் கொண்டாடும் ஒரு தனியார் பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சிகள்தான் அவை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏப்ரல் 27 அன்று முதலில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சமீபத்திய ராணுவ நிகழ்வுகளுடன் எந்த தொடர்பும் இல்லை.

    மேலும், ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் பல வெடிப்புகள் நடந்ததாக அல் ஜசீரா கூறியதையும் பிஐபி மறுத்துள்ளது.

    குருத்வாரா

    குருத்வாரா மீது ட்ரோன் தாக்குதல் என பரவிய போலி வீடியோ

    இதேபோல், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வெடிப்புகள் பற்றிய வதந்திகள் நிராகரிக்கப்பட்டன, மாவட்ட அதிகாரிகளால் விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே. நங்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியாவால் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் பிஐபி மறுத்துள்ளது.

    அந்த உள்ளடக்கம் ஜோடிக்கப்பட்டு வகுப்புவாத மோதலைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டது என்று கூறியது.

    இந்தியாவின் 70% மின் கட்டமைப்பை முடக்கிய சைபர் தாக்குதல் பற்றிய கூற்றுகளும் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கப்பட்டது.

    துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே நம்பியிருக்கவும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை ஆன்லைனில் பரப்புவதைத் தவிர்க்கவும் பிஐபி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானப்படை
    இந்திய ராணுவம்
    இந்தியா

    சமீபத்திய

    இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான் விமானப்படை
    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப் பாகிஸ்தான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் விராட் கோலி
    அமெரிக்காவுக்கு போன் போட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்; மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்கா

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்

    இந்திய ராணுவம்

    மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா கடும் பதிலடி ஜம்மு காஷ்மீர்
    ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்
    'ஆபரேஷன் சிந்தூர்': பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் பஹல்காம்
    ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் பாதிப்பு விமான நிலையம்

    இந்தியா

    இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கும் வாகனம்
    பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல் பஞ்சாப்
    'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல்  அல் கொய்தா
    லாகூர், கராச்சியில் பறந்த 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025