NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பொதுமக்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பொதுமக்கள் 
    சென்னை மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பொதுமக்கள்

    சென்னை மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பொதுமக்கள் 

    எழுதியவர் Nivetha P
    Dec 08, 2023
    05:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.

    இதற்கான மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினாலும், இன்னமும் பல இடங்களில் மின் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை, வெள்ளநீர் வடிந்த பாடில்லை.

    மக்கள் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளதால் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை,

    குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள சென்னை மேயர் பிரியா வீட்டினை அப்பகுதி மக்கள் இன்று(டிச.,8)காலை முற்றுகையிட்டனர்.

    போராட்டம் 

    'நாங்கள் யாரும் சாகல, பால் ஊத்துறதுக்கு' - ஆவேசமாக எழுந்த பெண்ணின் குரல் 

    அதன்படி, தங்களுக்கு உடனே தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வசதி செய்துத்தர வேண்டும்.

    மின் இணைப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆத்திரத்தில் கோஷங்களை எழுப்பினர்.

    இதனையடுத்து அந்த கூட்டத்தை நோக்கி பேசிய மேயர் பிரியா அப்பகுதி மக்களுக்கு உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், குடிநீர், பால் உள்ளிட்டவைகள் கிடைக்க வழிவகை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

    அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு பெண்ணின் குரல், 'நாங்கள் யாரும் சாகல, பால் ஊத்துறதுக்கு' என்று ஆவேசமாக எழுந்தது.

    பின்னர் ஒருவழியாக மேயர் அளித்த உறுதியின் பேரில் அங்கு கூடிய மக்கள் களைந்து சென்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரல் வீடியோ 

    pic.twitter.com/UFr5MrlEcc

    Chennai residents surround Mayor R Priya, argue intensely over lack of essentials and power supply in her ward.

    “This is your area, madam. We only voted for you.” they said.

    People’s anger is intense. #ChennaiRains2023 #ChennaiFloods2023…

    — Omjasvin M D (@omjasvinTOI) December 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மேயர் பிரியா
    மீட்பு பணி
    குடிநீர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  தமிழகம்
    இன்னும் சில மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற இருக்கிறது  மிக்ஜாம் புயல்  வானிலை எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை  கனமழை
    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ வனத்துறை

    மேயர் பிரியா

    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு  சென்னை
    பள்ளிகளை சீரமைக்க சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீடு  சென்னை
    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் சென்னை மாநகராட்சி

    மீட்பு பணி

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் வானிலை ஆய்வு மையம்

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025