NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி

    எழுதியவர் Nivetha P
    Sep 03, 2023
    04:41 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது.

    இங்கு பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் கிரிவலம் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்நிலையில் இங்கு அமைந்துள்ள கிரிவல பாதையிலும், ஆசிரமங்கள் உள்ள இடங்களிலும் ஏராளமான சாமியார்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர்.

    இவ்வாறு தங்கியுள்ள சாமியார்களுக்கு அங்குள்ள ஆசிரமங்கள், தன்னார்வலர்கள், ஆன்மீக அமைப்புகள் மூலம் அன்னதானம் அனுதினமும் வழங்கப்படுகிறது.

    அதேபோல் இவர்களது தேவைகள் அங்கு வரும் பக்தர்கள் மூலமும் பூர்த்தியடையும் பட்சத்தில் சாமியார்கள் இங்கு தங்க அதிக விருப்பம் கொள்கிறார்கள் என்று தெரிகிறது.

    இந்நிலையில், இங்குள்ள சில சாமியார்களுக்கு குற்ற பின்னணி இருக்கும் நிலையில், வெளியூரில் இருந்து வரும் சாமியார்கள் இடையே தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

    சோதனை 

    ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

    அதேபோல் இங்குள்ள சில சாமியார்களுக்கு போதை பொருள் பழக்கம் இருப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் தகராறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

    இதனால் அங்கு தங்கியுள்ள சாமியார்களுக்கு முகவரி, புகைப்படம்,கைரேகை உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

    இதற்கிடையே தற்போது அவற்றை சரிபார்க்கும் பணியில் திருவண்ணாமலை மேற்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆனந்தன், எஸ்ஐ.,சிவசங்கரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி சாமியார்களின் ஆவணங்களை சரிபார்த்து அவர்கள் இங்கு தங்கியுள்ள காரணம்? எவ்வளவு நாட்கள் தங்கியுள்ளனர்?போன்ற கேள்விகளையும் கேட்டு வருகின்றனர் என்று தெரிகிறது.

    நேற்று(செப்.,2) ஒரே நாளில் மட்டும் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    காவல்துறை

    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  சிறை
    டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி டெல்லி
    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  உத்தரப்பிரதேசம்
    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மேற்கு வங்காளம்

    காவல்துறை

    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கொலை
    பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பீகார்
    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  மணிப்பூர்
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025