NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன்
    திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன்

    மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 26, 2023
    05:26 pm

    செய்தி முன்னோட்டம்

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் சர்ச்சையில், அக்டோபர் 31ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மக்களவை நெறிமுறைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.

    இதுதொடர்பாக, புகார் அளித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெஹாத்ராய் ஆகியோரிடம் வியாழக்கிழமை (அக்டோபர் 26) விசாரித்த மக்களவை நெறிமுறைக் குழு, மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்று தெரிவித்துள்ளது.

    நெறிமுறைக் குழுத் தலைவர் வினோத் சோன்கர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்கின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Mahua Moitra cash for query scam all you need to know

    மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டின் பின்னணி

    தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி, அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியதன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்தது.

    மேலும், பாராளுமன்ற எம்பிக்களுக்கான தனிப்பட்ட லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்டை தர்ஷன் ஹிராநந்தனியிடமே கொடுத்து, கேள்விகளை அதில் பதிவிட மஹுவா மொய்த்ரா சொன்னதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பாஜக இந்த குற்றச்சாட்டை தீவிரமாக முன்வைத்துள்ள நிலையில், அவர் சார்ந்துள்ள திரிணாமுல் கட்சி இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ராவிடமிருந்து விலகியே இருக்கிறது.

    திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ'பிரையன் இது குறித்து கூறுகையில், நெறிமுறைக்குழு அறிக்கையின் அடிப்படையில் கட்சி முடிவெடுக்கும் என முடித்துக் கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிணாமுல் காங்கிரஸ்
    மக்களவை
    பாஜக
    இந்தியா

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    திரிணாமுல் காங்கிரஸ்

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரௌபதி முர்மு
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் மேற்கு வங்காளம்
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    பாஜக

    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை  இந்தியா
    இந்தியாவின் பெயர் மாற்றப்படுகிறதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள்  இந்தியா
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு உதயநிதி ஸ்டாலின்

    இந்தியா

    ககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது  விண்வெளி
    இந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கனடா
    ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி இஸ்ரோ
    பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025