NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்
    இந்தியா

    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்

    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்
    எழுதியவர் Nivetha P
    Feb 04, 2023, 12:37 pm 1 நிமிட வாசிப்பு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்

    பழனி முருகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதிஉலா வருவார். இந்நிலையில், திருவிழாவின் முக்கிய அம்சமான முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து மிக முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று(பிப்.,4) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நேற்று(பிப்.,3) முதலே பழனியில் குவிந்த வண்ணம் உள்ளனர். திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் நீராடிய பின்னர் மலை கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பெரும்பாலான பக்தர்கள் மேளத்தாளத்துடன் ஆங்காங்கே கோலாட்டம், கலில், ஒயில் ஆகிய பாரம்பரிய ஆட்டங்களை ஆடி வந்தனர்.

    பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் தீவிரம்

    அலகு குத்தியும், காவடி சுமந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தைப்பூச தேரோட்ட நிகழ்வு நடைபெறவுள்ளதால் அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் பேருந்துகள், வாகனங்கள் செல்லதடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தவிர்க்க ஆங்காங்கே போலீசார் தீவிரப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சாலையெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், இளநீர், ஐஸ்க்ரீம் என வெயிலுக்கு ஏற்ற பானங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு பேருந்துகள், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    திருவிழா
    கோவில்கள்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    மாவட்ட செய்திகள்

    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் கோவை

    திருவிழா

    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு

    கோவில்கள்

    பழனி தேவஸ்தானத்தில் உள்ள 281 பணியிடங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிப்பு திண்டுக்கல்
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம் கோவில் திருவிழாக்கள்
    ஆந்திராவில் இந்து கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு 3,000 கோயில்கள் அமைப்பு ஆந்திரா
    கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம் கேரளா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023