NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    பழனி முருகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நாளில் ஆயிரகணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி சுமந்தும் கோயிலுக்கு வருகைதருவார்கள்.

    அதைபோல், ஏராளமான பக்தர்கள் பேருந்து, ரயில் மார்க்கமாக வந்து முருகரை தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் நாளை(ஜன.,29)கொடியேற்றத்துடன் துவங்கப்படவுள்ளது.

    10நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாளான நாளை(ஜன.,29) பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகியன நடக்கும்.

    இதனை தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்ற பின்னர் கொடியேற்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதிஉலா வருவார்.

    ஏற்பாடுகள் தீவிரம்

    பிப்ரவரி 4ம் தேதி மாலை 4.30 மணியளவில் தேரோட்டம்

    மேலும் திருவிழாவின் 6ம் நாளான பிப்ரவரி 3ம் தேதி மாலை 7 மணிக்குமேல் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும்,

    இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வெள்ளிரதத்தில் சுவாமி வீதி உலா வருவார் என்றும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து இதற்கு மறுநாள் பிப்ரவரி 4ம் தேதி தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் 11 மணியளவில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்வார்.

    அதனையடுத்து மாலை 4.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

    தொடர்ந்து 7ம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

    மிக விமர்சையாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவின் ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவிழா
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025