NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது 

    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 04, 2024
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டை உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்) போலீஸ் கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட சத்யேந்திர சிவால் 2021 ஆம் ஆண்டு முதல் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தார் என்பதும், ஹபூரைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், வெளிவிவகார அமைச்சகத்தின் MTS(மல்டி-டாஸ்கிங், ஸ்டாஃப்) ஆக பணியாற்றினார் என்பதும் தெரியவந்துள்ளது.

    மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒரு உளவாளி செயல்படுவதாக பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்), சந்தேகத்தின் பேரில் சத்யேந்திர சிவாலை விசாரித்தது.

    உத்தர பிரதேசம் 

    விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் 

    ஆனால், முதலில் அவரது பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அதனால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

    அதனையடுத்து, அவர் கடைசியாக உளவு பார்த்ததாக ஒப்புக்கொண்டார் என்றும், அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    இந்திய ராணுவம் மற்றும் அதன் அன்றாட செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு சத்யேந்திர சிவால் லஞ்சம் கொடுத்த விவரங்களும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்திய தூதரகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் பற்றிய முக்கியமான மற்றும் ரகசிய தகவல்களை ஐஎஸ்ஐயிடம் வழங்கியதையும் சத்யேந்திர சிவால் ஒப்புக்கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரஷ்யா
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோவிலுக்கு உள்ளிருந்த எடுக்கப்பட்ட முதல் வீடியோ  உத்தரப்பிரதேசம்
    பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக்  கிரிக்கெட்
    பன்னூன் கொலைச் சதியில் ஈடுபட்ட இந்தியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம்: செக் நீதிமன்றம் அமெரிக்கா
    இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம்  மியான்மர்

    ரஷ்யா

    ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா  அமெரிக்கா
    ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல்; ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக்
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத உயிர்களை காவு வாங்கும் -ரஷ்ய அதிபர் புதின் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: சாட்டிலைட் ஆதாரங்களை வெளியிட்டது அமெரிக்கா உக்ரைன்

    பாகிஸ்தான்

    ENG vs PAK: 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்  ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up: இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்; பெண்கள் கிரிக்கெட் அணியை அறிவித்த இங்கிலாந்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா இந்தியா
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்

    உலகம்

    மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள் இந்தியா
    வீடியோ: யாருக்கும் தெரியாமல் புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு கீழ் இரகசிய சுரங்கப்பாதை தோண்டிய கூட்டம்  அமெரிக்கா
    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இங்கிலாந்து
    பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025