NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு
    இந்தியா மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு

    IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 26, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று, இந்திய ராணுவம் மற்றும் IIT, NIT போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்திருக்கின்றனர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.

    இது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, இந்தியாவின் க்விக் ஹீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான செக்ராய்ட் (Seqrite). இந்த துணை நிறுவனமானது வணிக நிறுவனங்களுக்கான சைபர் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகிறது.

    பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரான்ஸ்பரண்ட் ட்ரைப் (Transparent Tribe) என்ற ஹேக்கர் குழுவே இந்த சைபர் தாக்குதலை நடத்தி வருவதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஹேக்கர் குழுவானது, 2013-ம் ஆண்டு முதலே சைபர் தாக்குதல் முதலான சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    சைபர் கிரைம்

    இந்தியா கல்வி நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்: 

    அந்த ஆய்வறிக்கையின் படி, 'ராணுவ அதிகாரிகள் பணியிட மாறுதல் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்' என்ற தலைப்பிலான போலியான ராணுவ ஆவணம் ஒன்று, இந்த கும்பலால் உலவவிடப்படுகிறது.

    இந்த போலி ஆவணத்தில், ராணுவ கணினிகளில் உள்ள தகவல்களைத் திருடும் வகையிலான மால்வேர்களை புகுத்தி, மேற்கூறிய ட்ரான்ஸ்பரண்ட் ட்ரைப் ஹேக்கர் குழு,ஹேக் செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், கடந்த 2022 மே மாதத்தில் இருந்து, இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்களான IIT மற்றும் NIT உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீதும் மேற்கூறிய ஹேக்கர் குழுவானது சைபர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

    2023-ன் முதல் காலாண்டில் இந்தத் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், தகவல்களை திருட்டே இந்த சைபர் தாக்குதல்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    சைபர் பாதுகாப்பு
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  இந்தியா

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் கிரைம்
    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு இந்தியா

    பாகிஸ்தான்

    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் தாலிபான்
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் இம்ரான் கான்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி ஆப்கானிஸ்தான்

    இந்தியா

    மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம்  மணிப்பூர்
    அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி  பிரதமர் மோடி
    குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து  திரௌபதி முர்மு
    ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025