NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
    'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

    'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2023
    01:42 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக கட்சியின் வேதாரண்யம் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

    அதே தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேதாரத்தினம் இவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், ஓ.எஸ்.மணியன் அத்தொகுதி மக்களுக்கு சுமார் ரூ.60 கோடி வரை பணப்பட்டுவாடா செய்தும், வெவ்வேறு சமூக மக்கள் மத்தியில் பிரச்சனைகளை ஏற்படுத்தியும், தொகுதி மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் அவர் ஓட்டு கேட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

    வழக்கு 

    அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு 

    தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை 7000 பேருக்கு பட்டா போட்டு கொடுப்பதாக போலியான உறுதியினை வழங்கியும் வாக்கு பெற்று வெற்றிப்பெற்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும் அவர், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்னிலையில் நடந்தது.

    பணப்பட்டுவாடா செய்திருந்தால் தேர்தல் ஆணையம் அதனை தடுத்திருக்கும் என்று வாதாடிய ஓ.எஸ்.மணியன் சார்பிலான வழக்கறிஞர், அரசியல் ரீதியான பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதங்களை முன்வைத்திருந்தார்.

    இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று(டிச.,22) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 'ஓ.எஸ்.மணியன் தேர்தல் வெற்றி செல்லும்' என்று நீதிபதி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    அதிமுக
    திமுக
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    சென்னை உயர் நீதிமன்றம்

    இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஈரோடு
    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம் தமிழக அரசு
    'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு  தமிழ்நாடு

    அதிமுக

    ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  சுகாதாரத் துறை
    அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி  திண்டுக்கல்
    அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை எடப்பாடி கே பழனிசாமி

    திமுக

    'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு  பாஜக
    துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின் அதிமுக
    முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 'நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை தமிழ்நாடு
    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு தமிழ்நாடு

    தேர்தல் ஆணையம்

    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்  தேர்தல்
    எடப்பாடியை அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு  அதிமுக
    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்  எடப்பாடி கே பழனிசாமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025