NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்
    ஆபத்தில் சிக்க வைக்கும் ஆன்லைன் லோன் செயலி

    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022
    02:17 am

    செய்தி முன்னோட்டம்

    தற்போதைய காலக்கட்டத்தில், ஆன்லைனில் கடன் தரும் ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது.

    இதுபோன்ற செயலிகளில் அவசர தேவைகளுக்கு பணத்தை கடனாக பெற்றுவிட்டு, பிறகு அந்த செயலிகளின் மோசடிகளில் சிக்கி தவிப்பவர்கள் பலர்.

    இது போன்ற கடன் வழங்கும் செயலிகள் கூடுதல் வட்டி விதித்து வசூல் செய்வதோடு, பணத்தை முழுதாக கட்டி முடித்தாலும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் பணத்தை நாம் செலுத்த மறுத்தால் போனில் உள்ள தொடர்பு எண்களை தாமாகவே எடுத்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் மெசேஜ் செய்து தொந்தரவு செய்வதோடு, கடன் வாங்கியவருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

    இந்நிலையில் கடன் வாங்கி, செலுத்தாத நபரை போலீசில் நூதனமாக சிக்கவைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

    போலீசார் தீவிர விசாரணை

    வெடி குண்டு தயாரிப்பதாக போலீசில் போலி குற்றச்சாட்டு செய்த ஆன்லைன் லோன் செயலி

    சென்னை மாங்காடு, முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் கபீர் முகம்மது. இவர் கடந்தாண்டு விபத்து ஒன்றில் சிக்கியதால் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி, அதனை சரியாக செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இவரை சிக்க வைக்க, காவல்த்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, 'நாங்கள் ஜப்பானில் இருந்து பேசுகிறோம். மாங்காடு அருகே கபீர் முகம்மது என்பவர் வெடிகுண்டு தயாரித்து வருகிறார்' என்றுகூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.

    இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்றபின், அது தவறான தகவல் என்றும் கபீர் ஆன்லைனில் 5 லட்சம் வரை கடன் வாங்கி, சரியாக கட்டவில்லை என்பதும் போலீசுக்கு தெரியவந்துள்ளது.

    இதன் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடன்
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்

    தமிழ்நாடு

    17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியா
    தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை! விவரக்குறிப்புகள்
    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! கிரிக்கெட்
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி சென்னை

    இந்தியா

    'இன்டிபெண்டன்ஸ்': ரிலையன்ஸின் புதிய FMCG பிராண்ட் அறிமுகம் தமிழ்நாடு
    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! நீட் தேர்வு
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்திய ரயில்வே
    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025