NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
    இந்தியா

    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
    எழுதியவர் Nivetha P
    Feb 18, 2023, 07:43 pm 1 நிமிட வாசிப்பு
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

    டெல்லியில் இன்று(பிப்.,18) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. இதில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடைபெற இருந்தது. ஆனால் இடைத்தேர்தல், குடியரசு தலைவர் வருகை ஆகியவற்றால் தவிர்க்கப்பட்டது. எனவே அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி பிரச்சனைகள் தொடர்பாக பல கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து மத்திய நிதியமைச்சரிடன் கொடுக்க உள்ளதாகவும், 2020-21ம் ஆண்டின் ஜிஎஸ்டி ரூ. 4,230கோடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஒரே தேசம், ஒரே வரி என்பதை ஒருபோதும் செயல்படுத்த இயலாது

    மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. முக்கியமாக தீர்ப்பாய உறுப்பினர்களின் நியமனம் போன்றவற்றில் மாநிலங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 2-3 மணிநேர விவாதத்திற்கு பிறகு அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்துப்பூர்வ அறிக்கை விரைவில் வழங்கப்படும் என்று கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது. எனவே குழுவின் அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். தொடர்ந்து, ஒரே தேசம், ஒரே வரி என்பதை ஒருபோதும் செயல்படுத்த இயலாது. ஜிஎஸ்டி இழப்பை நீட்டிப்பது குறித்து விவாதிக்காமல் நிதி அமைச்சகமும் பிரதமரும் முடிவு செய்வதை ஏற்க முடியாது. அது ஜனநாயக நடைமுறை அல்ல என்றும் அவர் கூறினார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    நிதியமைச்சர்
    டெல்லி

    தமிழ்நாடு

    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  திருப்பூர்
    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர் கோவை
    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி   திமுக

    நிதியமைச்சர்

    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    நிதியமைச்சரின் ஆடியோ விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்  மு.க ஸ்டாலின்
    சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர்  தமிழ்நாடு
    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி இன்ஸ்டாகிராம்

    டெல்லி

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023